10

1.4K 100 116
                                    

                                              

                நாம்   இப்பொழுது   விஷ்ணுவர்மனை  சந்திக்கும்   இவ்வேளையில்   அவன்    அந்த   ராஜாங்கத்தின்   சிறைச்சாலையின்    ஒரு   தனி   அறையில்   வேதனையே   உருவாக   விட்டத்தைப்   பார்த்தபடி    நின்றுகொண்டிருந்தான் .   அவன்   முகத்தில்   எப்பொழுதும்    தவழும்   அந்த   புன்னகை    அவனுக்கும்   தனக்கும்   பூர்வஜென்ம   பகை  உள்ளதுபோல்    அவனை  விட்டு   தொலைதூரம்   சென்றுவிட்டிருந்தது .  எப்பொழுதும்  ஜ்வாஜல்யமாக   திகழும்  முகத்திலோ   துயரத்தின்   சாயலே   ஊற்றெடுத்திருந்தது . அவன்   மனமோ   அரசவையினில்  இன்று    காலை    நடந்த    நிகழ்ச்சிகளை   வருத்தத்துடன்   அசைபோட்டிக்கொண்டிருந்தது . 

             ஓர்    இரவு   எப்படி  தன்   வாழ்க்கையையே  மாற்றிவிட்டது  என்று   அவன்  மனம்  சிந்தித்தது .  இப்பொழுதும்   அவன்  மனம்   நடந்தது  அனைத்தும்   உண்மைதான்   என்பதை   ஒப்புக்கொள்ள   மறுத்துக்கொண்டிருந்த  வண்ணம்  இருந்தது  . 

            தன்   சிந்தனை   ஓட்டத்தை   இன்று  காலை   அரசவையில்  நடந்த  நிகழ்ச்சிகளின்   புறம்   திருப்பி  மறுபடியும்   நடந்ததை  நினைத்துப்பார்த்தான் . 

                 விஷ்ணுவர்மன்   தன்   மேல்   தவறில்லை  என்று   எவ்வளவு   வாதிட்டாலும்   அதை   நம்ப    ராஜசிம்மனின்   மனம்   மறுதலித்துவிட்டது .  அவனது  சிந்திக்கும்  திறன்  மரகதலிங்கம்பால்  அவன்  கொண்டிருந்த  பற்றுதலால்  மங்கிக்கொண்டிருந்தது .

                   “ விஷ்ணுவர்மா..... நான் உன்னிடம்  மிகுந்த  நம்பிக்கை  வைத்ததும்  , உன்னை  என்   உற்ற  நண்பனாக   நினைத்ததும்  என்   தவறுதான்   என்பதை   நிரூபித்துவிட்டாய்  . 

 இப்படி ஒரு துரோகத்தை செய்வதற்கு உன் மனம் எப்படி துணிந்தது.  உன்னை  இனிமேலும்   நம்புவதற்க்கு   என்   மனம்  தயாராகயில்லை . நீதான்  இக்குற்றத்தை   செய்தாய்  என்பதற்கு   சாட்சியாக  இந்த  காவலர்களும்  மேலும்   இதற்கு   ஆதாரமாக   நான்   உனக்கு   அளித்த   இந்த   மோதிரமும்   இருக்கின்றது . உன்னிடம்   இதற்கு  மேலும்   இப்படி   அமைதியாக  விசாரித்தால்   எப்பொழுதும்   உண்மை   வெளிவராது .  அதை  வெளிக்கொணர  வேண்டிய   விதத்தில்தான்   விசாரிக்க   வேண்டும்  “. என்ற  ராஜசிம்மன்  காவலர்களை  அழைத்து  விஷ்ணுவர்மனை  சிறைப்படுத்துமாறு  உத்தரவிட்டான் . 

அது மட்டும் ரகசியம்Место, где живут истории. Откройте их для себя