சத்யா வெளியே செல்லவும் இவள் மேசையில் படுத்து கொண்டே தன் யோசனையை தொடர்ந்தாள்.
"எதையுமே மறைக்காத என் அம்மா கிட்ட... என்னோட வாழ்க்கைல நடக்குற அத்தனை நல்லது கெட்டதையும் பகிர்ந்துக்க கூடிய என் பிரென்ட் கிட்ட என்னோட பெரிய கவலைய பகிர்ந்துக்க முடியாம இருக்கு... அதுவும் எனக்கு நினைவு தெரிய முன்ன இருந்தே என் கூட இருந்த ஒருத்தர்... எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியமான ஆளுன்னு நினச்ச ஒருத்தர்... இவரால எனக்கு எந்த ஒரு கஷ்டமும் வராதுன்னு நெனச்ச ஒருத்தரே என்னோட வாழ்க்கைல பெரிய கஷ்டத்த கொடுத்துட்டாரு... என்னால இதை கடந்து போகவும் முடியல... யார்கிட்டயும் என்னோட கவலைய பகிர்ந்துக்கவும் முடில... ரொம்ப கஷ்டமா இருக்கு..." என நினைத்தவளின் தொண்டை அடைத்துக்கொண்டு வந்தது. ஆனாலும் பக்கத்தில் ஆட்கள் இருப்பதை உணர்ந்து தண்ணீரை குடித்து விட்டு தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டாள்.
அதற்குள் சத்யா இவளுக்கு பிடித்த ரிட்ஸ்பெரி சாக்லேட்டை வாங்கி கொண்டு வந்து இருந்தாள்.
"ஹேய் மய் டியர் லவ்வு,மய் லைப்f,மய் ஹார்ட்,மய் சால்......"
என இவள் முன் சாக்லேட்டை காட்டி காட்டி அவளை கொஞ்சினாள் சத்யா. ஆனால் இவள் கண் வில்லை அசையவே இல்லை.அதை பார்த்த சத்யா 'என்ன செல மாதிரி இருக்கா... சாக்லட்ட பார்த்துமா இன்னும் அமைதியா இருக்கா... இது சரி இல்லையே... " என நினைத்து கொண்டு அவளை பிடித்து உலுக்கினாள். "அடியேய் சாக்லட் டி... இந்தா பிடி... உனக்காக ஐம்பது அடி நடந்து போய் வாங்கிட்டு வந்து இருக்கேன்..." என்றதும் மெதுவாக சாக்லட்டை வாங்கி கொண்டாள். பின் சத்யாவை பார்த்தாள்.
அதை பார்த்து சிரித்த சத்யா "என்னடி சாக்லட் வாங்கி தந்ததுக்கு எனக்கு கிஸ் கொடுக்கணும் போல இருக்கா... நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்... கொடு..." என சொல்லி கொண்டே தன் முகத்தை அவள் அருகே கொண்டு சென்றாள்.
அதை கேட்டதும் அவள் தோளில் ஒரு அடியை போட்டவள்
"ச்ச பிரென்டு மாதிரியா பேசுர நீ? லவ்வர் கிட்ட ரொமான்ஸ் பன்ற மாதிரி இருக்கு... தள்ளி இரு..." என்றாள்.
YOU ARE READING
நீங்கிச் செல்லாதே!
Romanceகாதலைக் காற்றாய் சுவாசித்தாள் அவள் காகிதமாய் எரிந்து விட்டுச் சென்றான் அவன் காத்திருக்கும் இவளுக்கு கிடைக்குமா அவள் காதல்???