!! 3!!

183 8 23
                                    


என்ன ரமேஷ் சொல்லுற சித்தப்பா இறந்து போயிட்டாரா , எனக்கு சொல்லி அனுப்பி இருந்திங்களா , எப்போ , எனக்கு எந்த தகவலும் வரலையே , எப்போ இறந்தாரு என சந்திரன் பதற அவருக்கு தனக்கு யார் போன் பண்ணி பேசியது என தெரியே வேண்டியது இருந்தது , யாரும் தங்களை திட்டம் தீட்டி இங்கே வர வைத்தார்களோ என்கிற யோசனையும் அவருள் ஓடியது அது மட்டும் இல்லாமல் தன்னோட சொந்தம் என்று சொல்ல இருந்த ஒருவரும் இப்போ இல்லை அந்த தகவலும் தனக்கு வந்த சேரவில்லை என்கிற குழப்பம் அவரை மேலும் கேள்வி கேட்க துண்டியது

அவரது எல்லா கேள்விகளுக்கும் ரமேஷ் , விடுங்க மச்சான் போனது பற்றி பேசி ஒரு லாபம் இல்லை ரொம்ப தூரம் ட்ரவேல் பண்ணிட்டு வந்து இருக்கீங்க முதல போய் ரெஸ்ட் எடுங்க பிறகு மனைவி பக்கம் திரும்பி தேவி , வந்தவங்களுக்கு சாப்பாடு எடுத்து வை , நான் இப்போ வந்துறேன் என சொல்லிவிட்டு சென்று விட்டார் .

அப்பாவை பற்றி பேச்சு வந்த உடனே தேவியும் கண் கலங்கி தானே போனாள் அவளும் தன் கண்களை துடைத்து கொண்டு , போங்க அண்ணி போய் கை கால் அலம்பிண்டு வாங்க நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என அவரும் அடுப்படிக்கு சென்று உணவு எடுத்து வைக்க போய்விட

இனியா மற்றும் இனியன் அந்த வீட்டின் ஒவ்வரு அறையாய் பார்த்து அங்கே நின்று செல்பி எடுத்து கொண்டு இருந்தார்கள் அவர்களை அழைத்து ராஜி உணவை சாப்பிட சொல்ல

அவர்களும் மறு பேச்சு ஏதும் பேசாமல் தேவிடம் பேசியே படி சாப்பிட்டார்கள் .

சாப்பிட்டு முடித்துவிட்டு எல்லாரும் அவர் – அவருக்கு கொடுக்கப்பட்ட அறைக்குள் போக

இனியா , இனியனிடம் , ஏன் அண்ணா இப்போ தேவி அத்தை என்னமோ சொன்னாங்களே , சின்ன தாத்தா இறந்து போய்டாங்க அப்புறம் எப்பிடி அவர் கால் பண்ணி நம்மள இங்கே வர சொல்லி இருபாரு , யாரோ நம்மள வச்சு ப்ளே பண்ணுறாங்களோ , என சந்தேகம் கேட்க

ஆமா பாப்பா எனக்கும் அதே சந்தேகம் தான் விடு என்ன நடக்குதுன்னு பார்ப்போம் என இருவரும் உறங்க ஆரம்பித்தார்கள் . சற்று நேரத்தில் வேகமாக கற்று வீச ஆரம்பித்தது , காற்றின் வேகத்தில் அடைத்து வைத்து இருந்த ஜன்னல்கள் திறந்துகொண்டு பட படவேன அடிக்க ஆரம்பிக்க

யார் அதுWhere stories live. Discover now