!!6!!

54 3 2
                                    


ராகவனுக்கு அடுத்து என்ன பண்ணுவதே என்றே தெரியவில்லை, வசுவை கையில் தூக்கி கொண்டு காரை நோக்கி நடந்தான், அவனுடன் ஆர்.வி சேர்ந்து அவன் வீட்டுக்கே சென்றார் ,அங்கே ராகவ் – வசுவின் மொத்த குடும்பமும் காத்து கொண்டு இருந்தது, வீட்டுக்கு வந்து சேர்ந்தவன் அங்கே இருந்த அனைவரையும் பார்த்து அப்பிடியே அதிர்ந்து நின்று விட்டான்.

"அப்பா - அம்மா நீங்க எப்போ வந்திங்க ஒரு போன் கூட பண்ணலையே,என ராகவ் காரி இருந்து இறங்கியே படி அவன் பெற்றோரிடம் நலம் விசாரிக்க"

ஏன்ப்பா , நாங்க எல்லாம் இங்க வர கூடாதா , நீ ஹோச்பிடல் பக்கம்ன்னு வசுவை உன் கூடவே அழச்சுட்டு வந்துட்ட , அவ இல்லாம வீடு வீடாவே இல்லை அதான் உங்க ரெண்டு போரையும் பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தோம், என அவனது தாயார் சொல்ல

அதை கேட்ட ராகவன் , என்னது எல்லாரும்னா , யா.யார் எல்லாரும் ம்மா ,என்ன சொல்லுரிங்க நீங்க என புரியாமல் அவன் கேட்க

அங்கே பாரு என அவர் வீட்டு பக்கம் கை காட்ட,ராகவன் அவர் காட்டியே பக்கம் திரும்பி பார்க்க ,அங்கே அவனது மொத்த குடும்பமும் நின்று இருந்து.

இப்போது ராகவனின் நிலை ரொம்ப மோசமாய் போய் விட்டது யாருக்கும் தெரியாமல் காதும்-காதும் வச்ச மாதிரி வசுவை இந்தியா அழைத்து செல்லலாம் என்று அவன் முடிவு செய்து இருந்த நேரத்தில் இவர்கள் எல்லாரும் இப்பிடி வந்து நிற்பார்கள் என்று அவன் கொஞ்சம் கூட நினைத்து கூட பார்க்கவில்லை, இப்போது என்ன செய்வது என அவன் யோசித்து கொண்டு ஆர்.வியே பார்க்க , அவரோ ஜாடையில் எப்பிடியாவுது இவங்கள கிளம்ப சொல்லு இல்லை உண்மை நிலவரத்தை எடுத்து சொல்லிடு என சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, காரில் மயக்கத்தில் இருந்த வசு ,தெளிந்து காரை புயல் வேகத்தில் கிளப்பி சென்றாள், அதை கவனித்த ராகவ், வசு....ஊஊஊ என்று அலறியே படி சார் பின்னால் ஓட துவங்கினான்

சற்று நேரத்தில் நடந்த கலவரத்தில் மொத்த குடும்பம் அதிர்ந்து நிற்க

யார் அதுWhere stories live. Discover now