அனிஷா ஓடர் செய்தவற்றை எடுத்துக் கொண்டு வரும் பொழுது எதேர்ச்சையாக திரும்பியவள் பயத்தினால் கண்கள் விரிய "இவனா" எனக்கூறி அதிர்சியினால் கையில் உள்ளவற்றை அப்படியே நழுவ விட்டாள்.
தரண் ஆச்சரியத்தில் சிலையாக நின்றிருக்க, கோஃப்பி கப்புடன் வந்த அதர்வா "தரண் டேய் தரண்"... என அழைத்துக் கொண்டிருக்கும் பொழுது கென்டீனை நோக்கி வந்து கொண்டு இருந்த RK அதர்வாவின் குரல் கேட்டு அவ் விடம் விரைந்தவன், தரண் பார்கும் திசையை நோக்கி அவன் பார்வையை செலுத்தினான்.
அதர்வா "டேய் தரண்"... என மீண்டும் அழைக்க, தரணிடம் இருந்து எந்த வித அசைவும் இல்லாமல்போக, "டேய் மச்சி என்னடா ஆச்சு... ஓரே ரியேக்க்ஷன எவ்ளவு நேரத்துக்குடா எஸ்ஃப்ரஷன் பண்ணிட்டு இருக்க போற"... தரணின் தோல் புஜங்களை பற்றி குலுக்கி "டேய் தீரா தரண்" என சத்தமாக அதர்வா குரல் கொடுக்க, சுய நிலைக்கு வந்த தீரா தரண், கண்கள் கோபத்தால் சிவக்க, அருகில் உள்ள மேசையின் மீது அவனது முழு கோபத்தையும் காட்டினான்.
அனிஷாவின் அருகில் வந்த அயேஷா "ஏன் இவ பேய் மொளாகாவ பார்த்த மாதரி ரியேக்க்ஷன் குடுகுறா"... என கூறி புரியாத பார்வை பார்த்தாள்.
அனிஷாவின் நிலையை பார்த்தவள், அவளுடைய ஆடையை சுத்தம் செய்வதற்காக அவளது கைகளை பற்றிக் கொண்டு வொஸ் ரூம் நோக்கி அயேஷா செல்ல, எந்த வித எதிர்ப்பும் இன்றி இழுத்த இழுப்பிற்கு அவளுடன் சென்றாள் அனிஷா.
"டேய்...டேய் என்னடா ஆச்சு... ஏதுடா உனக்கு இவ்ளவு கோவம்"...என கூறி தீரா தரணின் கைகளை அதர்வா பற்றி கொள்ள, தண்ணீரை எடுத்து தீரா தரணிற்கு புகட்டினான் RK.
அதர்வாவின் கைகளில் இருந்து அவனது கைகளை விலக்கிய தீரா தரண், "என் லைப்லே யார பார்க கூடாதுன்டு நெனச்சனோ அவளையே இன்னகி பார்துடேன்டா, நா அவள கொல பண்ணாம விடமாட்டேன்டா, எனக்கு அவ்ளவு சொந்தம் இருந்தும் அவளால தான்டா நா இப்போ யாரும் இல்லமா இருக்கேன், என் சந்தோஷமே என் அம்மா தான்டா என் சந்தோஷத்த பறிச்ச அவள நா சந்தோஷமா வாழ விட மாட்டேன்டா என உச்ச கட்ட கோபத்தில் தீரா தரண் கத்த", தன் மனம் கவர்ந்தவள் மீது ஏன் தன் நண்பன் வன்மத்தை வீசி எறிகின்றான் என புரியாம் தவித்தது அவன் உள்ளம்.
YOU ARE READING
ஏங்குதடி என் நெஞ்சம்
Romanceவெவ்வேறு தருணங்களில் நேசத்தை உணர்திடும் இரு உள்ளங்கள்.... காதலை பரிமார முன்பே வெறுப்பை தீயாய் கக்கியது ஓர் உள்ளம்.... காலம் கடந்து நேசம் கொண்ட உள்ளத்தையே வெறுத்தை உணரும் தருவாயில்.... நேசம் கொண்ட உள்ளத்தின் நினைவுளோடு வாழ நேர்திடும் என அறிந்திருந்தா...