தொட்டுவிடும் தூரத்தில் வெற்றி இல்லை...
இருந்தும் அதை தொடாமல் விடுவதாய் நானுமில்லை...எட்டி நின்று நகைப்பவர் யாவரும் நான் வெற்றி பெற்று திரும்பி பார்க்கையில் அதே இடத்தில் நின்று மற்றவரை பார்த்து நகைத்து கொண்டுதான் இருப்பர்...
நகைப்பவர் யாவரும் நீ தடையாய் என்று எண்ண கூட தகுதியற்றவரே...உனக்குள் இருக்கும் உன் உண்மையான தடைகள் நம்பிக்கையின்மையும், தயக்கமுமே....
உன் தடைகள் யாவையும் தேடிச் சென்று தகர்த்தெறி உன்னை விட வீரன் இங்கு எவனுமில்லை...
முடியாது என்பவன் சோம்பேறி
முடியும் என்பவன் சிந்தனையாளன்
முடித்து காட்டுபவனே வெற்றியாளன்...
YOU ARE READING
என் இதயத்தின் சாரல்கள்
Poetryஎன் இதய இன்ப துன்பங்கள் யாவும் கவிகளாய் படைக்க துடிக்கிறேன், முழுதாய் அவைகள் வெளி கொணராவிடிலும் என்னால் இயன்றவை....