6

817 28 8
                                    

" இது நட்பா..காதலா.. காமமா.. ஈர்ப்பா..

எதன் முதல் படி இது என்று புரியவில்லை..

ஆனால் இந்த நாணம்.. புன்னகை..  பிடித்திருக்கிறது.."

" வது சான்ஸே இல்ல போ.. என்னயே இவ்வளவு வெட்கப்பட வைக்கிறியே. ஆனா எப்பவும் பசங்க தான பொண்ணுகளுக்கு கவிதைலாம் எழுதுவாங்க? ஆனா இது எனக்கும் புதுசா ஒருமாதிரியா புடிச்சு இருக்கு. உள்ளுக்குள்ள செமயா இருக்கு"

"யாருக்கு எது வருதோ பண்ணுவோம். வது வா? 😍 "

"ஆமா அதான் உனக்கு நிக்நேம், அப்படி தான் உன் பேர சேவ் பண்ணி இருக்கேன். உன்ன பாத்துட்டு வந்த அன்னைக்கே "

" என் வாட்பேட் பிரண்ட்ஸ் சில பேர் அப்படி கூப்பிடுவாங்க ஆனா நீங்க சொல்லும் போது அது தனி கிக் தான் "

"அதான் அத்தானோட மகிமை.."

இப்படியான உரையாடல்களில் ஆரம்பித்தது அவர்கள் காதல் பயணம்.

" உந்தன் கண்களை எப்பொழுதும் மறைக்காதே என்னிடமிருந்து அந்த குளிர் கண்ணாடியை கொண்டு.... 

என் உயிர் உன் உயிருடன் உறையாடும் வழி உன் விழி... 

உந்தன் உணர்வுகளை காட்டும் கண்ணாடி உன் விழி.. அதற்கு ஏன் ஒரு முகமூடி... 

எந்தன் கண்ணாடிக்கு இன்னொரு கண்ணாடி வேண்டாமே அத்தான்..."

வாட்சப்பில் தன்னவனின் முகத்தை கண்டு இரசித்துக்கொண்டு இருந்தவளுக்கு அவன் அணிந்து இருந்த குளிர்கண்ணாடியின் மேல் சுறு சுறுவென கோபம் ஏறியது. அவன் கண்களை பார்க்க விடாமல் தடுத்து விட்டது அல்லவா அது, அதனால் அதனிடம் சலித்தவள் மேற்கண்ட குறுஞ்செய்தியை அவனுக்கு தட்டிவிட்டாள்...

அவனிடமிருந்து புன்னகையே பதிலாக வந்தது. தொடக்கத்தில் உணர்ச்சிகளின் வேகத்தில் தன் சுபாவத்திற்கு மாறாய் தன் மனம் திறந்து அவளிடம் தன் அன்பை வெளிகாட்டிய பிரவீன் அதன்பின் ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை. இவளும் அவன் சுபாவத்தை விவரிக்கையில் புரிந்தது போல் தலையாட்டினாளே அன்றி முழுவதுமாய் அவன் கூறியது புரிந்ததா என்பது சந்தேகமே.

என்னை களவாடிய கள்வாWhere stories live. Discover now