கட்டழகியே
என் முதல் குழந்தையே...
உன் புன்ககையில்
சொர்கம் வாழுதடி...
விவரம் தெரியாத
வயதிலே விளையாட்டில்
தாயானேன் உனக்கு...
இன்றும் என்றும்
தாய்தானடி உனக்கு..
உன் சேட்டையை சகித்து வாழ
எவன் மாட்டப்போகிறானோ...
எவர் தான்
மயங்க மாட்டார்
உன் புன்னகையில்...
உன்னை சூழ்ந்தது
கிளை என அறிந்தும்
அதை முறியடிக்கும்
முறையை என்னால் மேம்படுத்த
இயலவில்லையடி தோழியே...
உன் இன்பத்தை
பங்கெடுக்க பலர்
இருந்தும்
உன் துன்பத்தை
பகிர்ந்தெடுக்க சிலர்
இருக்கிறோம் என்பதை மறவாதே...
யாரறிவார் எதிர்காலத்தில்
நம் நட்பு வெவ்வேறு
இடங்களில் இருக்கலாம்..
ஆனால் உனக்கு துன்பமென்று
ஏதேனும் நிகழ்ந்தால்
அங்கு முதல் ஆளாய்
நாங்கள் என்றும் துணையாய் இருப்போமடி...
எந்த சூழ்நிலையிலும்
நம் நட்பு முறிய
அனுமதி அளிக்காதே...
அளித்தயெனில்
உனக்கு பாடமெடுக்க
அடுத்த நொடி
நான் உன் முன் இருப்பேன்...
உனக்கு நானளிக்கும்
பாடங்கள் நேரம்
போவதற்காக அல்ல டி...
நேரம் போகும் காலத்திலும்
பிரச்சனை ஒன்று ஏற்பட்டால்
நீ கலங்கி நிற்கக்கூடாதென்று தான டி...
உன் புன்னகையில்
வாழும் எங்கள் நிம்மதியை
அழித்து விடாதே...
தனிமையில் இருப்பதாய்
எண்ணாதே...
உன் அருகில்
எவ்வுருவிலாது
இருப்பேனடி
உனக்கு
என்றென்றும் துணையாய்....- உன் அன்பு தோழி
என் இனிய தோழி Kitty க்கு... ❤❤
DhiraDhi❤
![](https://img.wattpad.com/cover/196052324-288-k723465.jpg)
YOU ARE READING
தீராவின் வெட்டி கிருக்கல்ஸ்...
Poetryhiii idhayangale.... padichittu nalla iruntha sollungooooo