வார்த்தைகள் தீர்த்தகையில் மௌனங்கள் அழகு -2

1.7K 58 62
                                    

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤❤️❤️

உன்னை உன்னை
தேடி தானே இந்த ஏக்கம்
இந்த பாதை இந்த பயணம்
இந்த வாழ்க்கை ஆனதோ
கனவுகள் பொங்குது
எதிலே அள்ள வலிகளும்
சேர்ந்தது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது
உன்னை தேடியே

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

பூஜா வீட்டுக்கு வந்திருந்தாள். புவனா பூஜாவை நன்றாக கவனித்து கொண்டார். பூஜா வந்த உடன் தேவாவை வயலுக்கு அனுப்பி விட்டார். மதியம் நேரம்தான் வீட்டுக்கு வந்தாள் தேவா. அவளுக்கு மிகவும் களைப்பாக இருந்தது.மதியம் நேரம் பசியில் வந்தவளுக்கு சாப்பாடு நியாபகம் வரவில்லை கழுவி வைக்க வேண்டிய பத்திரங்கள்தான் நியாபகம் வந்தது.எப்படியும் பாத்திரம் எல்லாம் இருக்கும் என்று நினைத்துகொண்டு வீட்டின் பின்பக்கம் செல்ல அங்கே பாத்திரம் எதுவும் இல்லை. தேவாக்கு குழப்பமாகிவிட்டது. வேகமாக அடுக்களைக்குள்(சமையல் அறை )வந்தாள் அவளை பார்த்து புன்னகை செய்தபடி சாப்பாடு இட்டு கொண்டிருந்தாள்.

ஹோய் என்ன ஆச்சு. அப்டியே நின்னுட்ட வா வந்து சாப்பிடு உனக்காகதான் சாப்பாடு இட்டு வச்சேன்.அப்புறம் அம்மா வந்தா உன்ன நிம்மதியா சாப்பிட விடமாட்டாங்க. வா வந்து சாப்பிடு என்று அவள் கையை பிடித்து அழைத்துவந்து தரையில் உட்கார வைத்து சாப்பாடை முன்னால் வைத்தாள் பூஜா. தேவா சாப்பிடாமல் பூஜாவை பார்த்தாள்.

என்ன ஆச்சு ஏன் இப்படி சாப்பிடாம இருக்க.நான் ஒண்ணும் சாப்பாடு பண்ணல. நம்பி சாப்பிடு. இரு நானும் சாப்பிட போறேன் . என்று சொன்னவள் தானும் சாப்பாடு போட்டு கொண்டாள். தேவா சாப்பிட ஆரம்பித்தாள். அவளை பார்த்து புன்னகை செய்தாள் பூஜா.அவர்கள் சந்தோசமாக சாப்பிட ஆரம்பிக்க அப்போது அங்கு வந்து சேர்ந்தார் புவனா.பக்கத்து வீட்டில் கதை அடித்துவிட்டு என்னவோ உலகத்தில் உள்ள எல்லா வேலையையும் ஒரே ஆள் செய்தது போல் வந்து அமர்ந்தார்.

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு [completed]Where stories live. Discover now