வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -43

695 22 10
                                    

❤️ஆருயிரே மன்னிப்பாயா
மன்னிப்பாயா சொல்லு நீ என்
சகியே ஆருயிரே மன்னிப்பாயா
மன்னிப்பாயா சொல்லு நீ என்
சகியே❤️

சூர்யா அப்படி பாதியிலேயே போனை வைத்ததும் தேவாக்கு என்னவோ போல இருந்தது. சாப்பாடை வீணாக்க கூடாதே என்று அமைதியாக சாப்பிட்டவள் பிறகு தட்டை எல்லாம் எடுத்து  வைத்துவிட்டு வந்து அமர அவள் அங்கு வருவதை பார்த்த புவனா இன்னும் தூக்கத்தை தொடர்வதை போல நடித்தாள்.

அப்போது தேவாக்கு பூஜா வீடியோ கால் செய்தாள். பூஜாவின் நம்பரை பார்த்ததும் அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. போனை அட்டென்ட் செய்து சைகை மூலம் பேச ஆரம்பித்தாள்.

பூஜாவும் அவளுடன் சந்தோசமாக பேசினாள்

"ஹே தேவா நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்ன்னு நினைச்சேன்",என்று ஆரம்பித்தவள் சிக்னல் இல்லாததால் பேசுவது விட்டு விட்டு கேட்டதும்

"ஹே தேவா சிக்னல் இல்ல போல. சிக்னல் இருக்க இடத்துக்கு போ", என்றாள். அதைக்கேட்ட தேவா ஹாலுக்கு வந்து அமர  அவள் போனை திருப்பி பிடித்த நேரம் தன்னுடைய பாசமான அம்மாவை பார்த்தாள் பூஜா.

சம்மந்தமே இல்லாமல் இந்த நேரத்தில்  புவனா தேவா வீட்டில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி ஆனாள் பூஜா.

"தேவா இந்த அம்மா உன் வீட்ல என்ன பண்ணுறா. நீ எதுக்கு அமைதியா இருக்க.. இவங்க எப்போ வந்தாங்க. நீ எதுக்கு இவங்கள இங்க விட்ட ",என்று கேட்டாள் பூஜா. இது எல்லாம் உறங்குவது போல நடித்துக்கொண்டிருந்த புவனாக்கும் கேட்கதான் செய்தது. என்ன செய்ய அவரால் எதுவும் பேசதான் முடியவில்லை

"ஊருல ஒவ்வொரு பிள்ளையும். அம்மா சொல்லி குடுக்காமலே அடுத்த தாரத்து பிள்ளைகிட்ட அவ்ளோ கோவத்தை காட்டும் இவளை நான் என்ன சொல்றது. என்ன விட அக்கா அக்கான்னு அவமேல உயிரா இருக்கா. இவ பிறந்த உடனே என் அக்காவை கொன்னா. இந்த தேவா என்ன அவ்ளோ நல்லவளா.அடுத்து இவளுக்கு அம்மாவா இருக்கணும்ன்னு என்ன ரெண்டாம் தாரமா மாத்தி என் ஆசையை கொன்னா. இப்போ என் பொண்ணையும் என்கிட்ட இருந்து எடுக்க பாக்குறா. இதுக்கெல்லாம் நான் உன்ன சும்மாவே விட மாட்டேன்", என்று மனதுக்குள் நினைத்துகொண்டாள் புவனா.

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு [completed]Where stories live. Discover now