🥔🌽🌶🥒🫑🍆 பாகம் 2

36 3 0
                                    

1. புடலையன் (நம்பி)

2. வாழை நாச்சி (நங்கை)

3. வெண்டையன் (நண்பன்)

4. கத்தரி அரசி (தோழி)

5. பச்சையன் (தம்பி)

6. வெங்கைமணி (தங்கை)

7. உருளையன் (அப்பா)

8. பீர்க்கையாள் (அம்மா)

9. தக்காளி நம்பி (தாத்தா)

10. பூசணியாள் (பாட்டி)

"அடேய்.... புடலையா! நாம் இப்படி அடுத்தவர்களின் பசி போக்கும் கறிகாய் வகையாய் உயர் பிறப்பு எடுத்ததற்கு மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டுமடா; ஆஹா என்ன ஒரு அருமையான மணம்......! புளியோதரை, முறுக்கு, லட்டு, அதிரசம், அப்பம், கதம்ப சாதம்.....! அடடா; எவர் வீட்டு அடுக்களையிலோ புரண்டு, உருண்டு பின் அவர்கள் வீட்டு இல்லக் கிழத்தியின் கைகளால் அறுபட்டு, சமைத்த பதார்த்தங்களாகி நாம் மாள்வதை விட,
அரங்கனின் அடியாருக்கு திருவமுதாய் படைக்கப்பட என்ன பாக்கியம் செய்து நாம் விளைந்திருக்க வேண்டுமடா நண்பா?" என்று மிகவும் மனமகிழ்வுடன் தன் நண்பனிடம் பேசிக் கொண்டிருந்தான் வெண்டையன்.

இருவரும் இத்தனை நாளாய் விளைநிலத்தில் ஒன்றாய் அறுவடைக்கு காத்திருந்து சரியான உருவத்தில், நிறத்தில், பதத்தில் புடைத்து வளர்ந்திருந்தவர்கள்! அதனால் வெண்டையனும், புடலையனும் நல்ல நண்பர்கள்......

"கூறு கெட்ட வெண்டையனே! அரங்கனுக்கு அமுதாய்ப் படைக்கப்படத்தான் உன்னை ஒரு விவசாயி நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி விளைவித்தானா? உன்னுடைய கருத்துக்களை உன்னுடனே நிறுத்திக்கொள்! நானெல்லாம் எவன் வாயிலும் அரைபட்டு சாவதற்காக இந்தப்பிறவி எடுக்கவில்லையடா! எப்படியும் என் உடம்பு அழுகி மண்ணுக்குள் புதைவதற்குள்
இந்த மடப்பள்ளியை விட்டு வெளியேறி நாலு வீதிகள், நானூறு மனிதர்களையாவது வேடிக்கை பார்த்து விட்டு நான் முளைத்து வந்த மண்ணுக்கு உரமாய் மறுபடியும் மண்ணிலேயே கிடந்து தான் எனது இன்னுயிரை துறப்பேன்...... எனது எண்ணம் அறியாமல் நீ பாட்டில் எதையாவது பிதற்றிக் கொண்டிருந்தாய்?
உன் வயிற்றைப் பற்றி உள்ளிருக்கும் வெள்ளை முத்துகளை வெளியில் பிதுக்கி எடுத்து விடுவேன்; சும்மாயிரு!" என்று கோபாவேசமாக பேசிய புடலையனிடம் நமுட்டுச் சிரிப்புடன்,

மடப்பள்ளி நம்பிகளும் மரக்கறி நங்கைகளும்✔Tempat cerita menjadi hidup. Temukan sekarang