🥔🌽🌶🥒🫑🍆 பாகம் 3

18 3 0
                                    

1. புடலையன் (நம்பி)

2. வாழை நாச்சி (நங்கை)

3. வெண்டையன் (நண்பன்)

4. கத்தரி அரசி (தோழி)

5. பச்சையன் (தம்பி)

6. வெங்கைமணி (தங்கை)

7. உருளையன் (அப்பா)

8. பீர்க்கையாள் (அம்மா)

9. தக்காளி நம்பி (தாத்தா)

10. பூசணியாள் (பாட்டி)

கூட்டத்தில் இருப்பவர்களில் பூசணியாள் மட்டுமே அளவில் மிகப் பெரியவர்களாய் இருக்க அவர்களை எப்படி இங்கிருந்து வெளியேற்றுவது என்ற யோசனையில் மூளையைப் போட்டு கசக்கிக் கொண்டிருந்தான் புடலையன்.....

"பிள்ளைங்களா.... நீங்க வேணும்னா என்னைய விட்டுட்டு கிளம்புங்கப்பா; எல்லாரும் சேர்ந்து வெளியேறப் போறோம்னு சொன்னீங்களே, அதனால நாமளும் அதுக கூட போவம்னு நெனச்சேன்; ஆனா அப்டி நினைச்சவ என் உருவத்த மறந்துட்டேன்! உங்க எல்லாரையும் தட்டுல ஒரு பக்கமா வச்சு, மறுபக்கமா என்னைய மட்டும் வச்சாலுமே நான் தான் அதிக எடையா இருப்பேன்; என்ன செய்ய என்னோட உடம்புவாகு அப்டி!" என்று தன்னை ஒருமுறை பார்த்துக் கொண்டு சற்று வருத்தத்துடன் பேசிய பூசணியாளிடம்,

"இல்ல பாட்டி! எங்க கூட வரணும்னு நெனச்சுட்ட உங்கள உங்க உருவம் பெரிசா இருக்குங்குற காரணத்துக்காக எல்லாம் எங்களால விட்டுட்டுப் போக முடியாது! நாம எல்லாரும் இப்ப மடப்பள்ளியில இருந்து வெளிய கிளம்பி, கோவிலுக்கு வந்த பக்தர்கள்ல நாம முதல்ல பார்க்குற ஆளுங்க காலடியில உருண்டு போய் கெடக்கணும்! நம்ம எல்லாரும் இன்னும் நல்ல கறிகாய்ங்க தான்; அதனால பாக்குறவங்க அவங்களோட பைக்குள்ள போட்டு நம்மள கோவில் வாசல் வரைக்கும் கொண்டு போயிட்டா போதும்; அங்கிருந்து நாம சுலபமா தப்பிச்சுடலாம்! இன்னும் அரைமணி நேரத்துல நாம பத்து பேரும் கிழக்கு கோபுர வாசல் பக்கத்துல சந்திக்கலாம்!" என்று சொன்னவனிடம் வாழைநாச்சி கிண்டல் குரலில்,

மடப்பள்ளி நம்பிகளும் மரக்கறி நங்கைகளும்✔Where stories live. Discover now