1. புடலையன் (நம்பி)
2. வாழை நாச்சி (நங்கை)
3. வெண்டையன் (நண்பன்)
4. கத்தரி அரசி (தோழி)
5. பச்சையன் (தம்பி)
6. வெங்கைமணி (தங்கை)
7. உருளையன் (அப்பா)
8. பீர்க்கையாள் (அம்மா)
"பாப்பு..... என்னடா டல்லா ஒக்காந்துட்டு இருக்க? என்னாச்சு? மதிய க்ளாஸஸ்ல மிஸ் ஏதாவது திட்டுனாங்களா?" என்று கனிமொழியிடம் அக்கறையாக விசாரித்தாள் திலகா.
"நான் எதுக்கு மிஸ் கிட்ட திட்டு வாங்கப் போறேன்? நான் ரொம்ப குட் ஸ்டூடெண்ட் தெரியுமாம்மா?" என்று சொன்னாள் கனிமொழி. தன் மகளது கண்களின் உருட்டலைப் பார்த்து திலகாவிற்கு சிரிப்பு வந்தது; ஆனால் இப்போது தான் சிரித்தால் இவள் இன்னும் கோபமடைந்து விடுவாள் என்று நினைத்தவள்,
"என்னடா ஆச்சு?" என்று கேட்ட படி மொழியின் தலையை மெல்லமாய் வருடினாள்.
"தாத்தா, பாட்டியும் போயிட்டாங்கம்மா!" என்று வருத்தமாக சொன்னவளிடம்,
"தாத்தாவும், பாட்டியும் நம்ம வீட்டுக்கு வரவேயில்லயேடா? நீ என்னடான்னா போயிட்டாங்கன்னு சொல்ற! எங்க போயிட்டாங்க? யாரு போயிட்டாங்க?" என்று கேட்ட திலகாவிடம்,
"ம்ப்ச்! நான் நம்ம தாத்தா, பாட்டியப் பத்தி பேசலம்மா! தக்காளி நம்பி தாத்தாவும், பூசணியாள் பாட்டியும் கதையில இருந்து கிளம்பிட்டாங்க; இனிமே கதையில 8 பேரு தான் இருப்பாங்க!" என்று சொல்ல திலகா கனிமொழியிடம்,
"ஓ! எங்க பாப்பு கதை எழுத ஆரம்பிச்சு, அதுல ரெண்டு காரெக்டர்ஸ் கிளம்ப வேற செஞ்சுட்டாங்களா? அம்மா உன் கதைய படிக்கலாமாடா செல்லம்?" என்று திலகா தன் மகளிடம் ஆர்வக்குரலில் கேட்க கனிமொழி தனது டைரியை எடுத்து வந்து தன் அன்னையிடம் நீட்டினாள். தனது அன்னையின் எதிர்ப்புறமாக அமர்ந்து கொண்டு கதையைப் படிக்கும் தன் அன்னையின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
YOU ARE READING
மடப்பள்ளி நம்பிகளும் மரக்கறி நங்கைகளும்✔
Humorஒரு சிறுமியின் கற்பனையில் உருவாகும் கதையில் மடப்பள்ளி சமையலுக்காக கொண்டு வரப்படும் நம் கதையின் நாயகர்கள் மற்றும் நாயகிகள் அவர்களுடைய வாழ்வை அந்த அறையிலேயே முடித்துக் கொள்ளப் போவதில்லை என முடிவெடுத்து பட்டினப் பிரவேசம் புறப்படுவது தான் கதையின் கரு!