28

291 30 3
                                    

வள்ளியின் உடல் நிலைக்கு காரணம் உடல் அயர்ச்சி என்று கூற, அதற்கான காரணத்தை ஜீவா கண்டறிந்த போது அவனுக்கு கண்கள் கலங்கியது.

" எதுக்குமா இப்படி பண்ணீங்க" என்று ஜீவா வள்ளியை தன் தங்கைகள் முன்னிலையில் வைத்து கேள்வி கேட்க வள்ளியால் பதில் கூற முடியவில்லை. உண்மையை கூறினால் எங்கே தான் செய்ததை வெளியில் சொல்லி பரிதாபம் தேட முனைகின்றாரோ என உலகம் நினைக்கும் என்ற எண்ணம் அவருக்கு.

" நீ ஊருக்கு உங்க ஸ்கூல் பசங்களோட வந்தப்போ அவங்க உனக்கு கொடுத்த மரியாதைய பார்த்தப்போ எனக்கு கண்ணு கலங்கிடிச்சு ஜீவா. உனக்கு இப்படி ஒரு மரியாதையான உத்தியோகமும் மத்தவங்க முன்னாடி மதிப்பும் வரனும்னுதான் நான் உன்ன ஒதுக்கி வெச்சி வந்தேன். அதுவே என் கண் முன்னாடி நடக்குறப்போ என்னால அந்த சந்தோசத்த தாங்கிக்க முடியல. அதனாலதான் நான் நீ ஊருக்கு போறவரைக்கும் சாமிக்கு விரதம் இருந்தேன்" என்று கூற சங்கவி தன் தாயை பார்த்து முறைத்தாள்.

" உன்னையெல்லாம்... எனக்காக எப்பவாச்சும் விரதம் இருந்திருக்கியா நீ. பெத்த பிள்ளைக்குலாம் பண்ணல்ல. அதுவும் நான் காய்ச்சல் வந்து படித்திருந்தப்போ நல்லா சிக்கன் பிரியானி பண்ணி எல்லோரும் சாப்பிட்டீங்கள்ள. அன்னைக்கு எனக்கு ஒரு வாய் சோறு கூட தரலேயம்மா நீ" என்று கூற எல்லோரும் சிரித்துவிட்டனர். சங்கவி எப்போதும் அவள் குழந்தையாகவே இருந்தாள். அவளுக்கு தேவை தன்னை எல்லோரும் தூக்கி வைத்து கொண்டாடவேண்டும் என்ற எண்ணம். ஆனந்தி ஜீவாவின் மேல் பாசம் வைத்தால் அவள் மீது கோபிப்பாள். அதே போல ஜீவா ஆனந்தி மேல் பாசம் வைத்தாலும் அவன் மீது கோபம் கொள்வாள். இப்போது வள்ளிக்கு ஜீவாமேல் இருந்த பாசத்தை பார்த்து அவளுக்கு பொறாமை கூட வந்தது. இதே கோபம்தான் ஜனனியின் மீது ஜீவா பாசமாக இருப்பதை கண்ட போதும் வந்தது.

" ஆமா ஜீவா கேட்க மறந்துட்டேன். அந்த பொண்ணு ஜனனி என்னப்பா உன்னையே சுத்தி சுத்தி வந்தா. எனக்கு அந்த பொண்ண இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்த ஞாபகம் இருக்கு. ஆனா எங்கன்னுதான் ஞாபகம் வரல" என்று கூற சங்கவியும் ஆனந்தியும் நமட்டு சிரிப்பு சிரிக்க ஜீவா தடுமாறுவது வள்ளிக்கு புரிந்தது.

மை விழி திறந்த கண்ணம்மாWhere stories live. Discover now