35

346 30 2
                                    

வீட்டிற்கு இவர்கள் வர அங்கே வித்யாவும் ரவீர்ந்தரும் இருந்தனர். இவர்களைக் கண்ட சாரதாவும் ஜீவாவும் வாய் பிளந்து நிற்க, வித்யா இவர்களை பார்த்து வாய் பிளந்தாள்.

ஆண்கள் இருவரும் ஹாலில் இருக்க, சாரதாவை இழுத்துக் கொண்டு கிட்சனுக்குள் வித்யா புகுந்தாள்.

" டார்லிங்க், என்ன நடக்குது இங்க. உன் வீட்டுக்கு எந்த ஆம்பளையையுமே நீ அனுமதிக்க மாட்ட. ஆனா ஜீவா கூட வெளியில அதுவும் தனியா போயிட்டு வர" என்று கூற சாரதா அமைதியாக இருந்தாள். ஆனாலும் அவள் அமைதியில் ஒரு வெட்கம் இருந்தது. ஜனனி நாசூக்காக இவர்களுக்கு தனிமையை கொடுத்து அவளின் அறையில் புகுந்து கொண்டவள் வித்யாவை மனதுக்குள் திட்டினாள்.

' இதுங்க ரெண்டும் என்ன பேசினதுன்னு தெரிஞ்சிக்க நான் ஆவளா இருந்தா, இந்த கரடி வித்யா மிஸ் வந்து கெடுத்துட்டாங்களே'.

சாரதா வித்யாவிடம் அவள் ஜீவாவிடம் பேசிய அனைத்தையும் கூற வித்யா தலையில் அடித்துக் கொண்டாள்.

" சரியான லூசு சாரதா நீ. பத்து வருசம் அவன காத்திருக்க சொல்லிருக்கியே உனக்கே இது நியாயமா இருக்கா? ஜனனிக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் அவன் தனியா இருக்கனுமா? ஏன் இப்படி பண்ற. சரி ஒரு விசயம் யோசிச்சிப்பாரு. ஜனனி கல்யாணத்துக்கு அப்புறம் நீ எப்படி வேணா இருக்கலாம்னு யோசிச்சது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் தெரியுமா? சரி அவ கல்யாணத்துக்கு அப்புறமா நீ வாழ்க்கைய தேடிக்கிட்டா அவ புருசன் வேணும்னா அதை ஏத்துக்கலாம். ஏன் அவளுக்கு வரப் போற மாமனார் மாமியார் கூட ஏத்துக்கலாம். ஆனா, கூட இருக்குறவங்க என்ன பேசுவாங்கன்னு யோசிச்சியா. அது ஜனனி வாழ்க்கைய ஏதோ ஒரு வகையில பாதிக்கும்தானே. ஆனா இப்பவே நீங்க ரெண்டு பேரும் சேர்ந்தீங்கன்னா, ஒரு இரண்டு வருசத்துக்கு ஊரு பேசும். அப்புறமா அது சாதாரன விசயமா ஆகிடும். அதுக்கு அப்புறமா ஜனனிய கட்டிக்க வர்றவன் உன் கடந்த காலத்தையும் ஏத்துக்குவான். எல்லா விசயத்துலயும் கரக்டா யோசிக்கிற நீ ஏன் இதுல கோட்டை விட்ட. சரி இதுக்கு ஜீவா என்ன சொன்னான" என்று கேட்டாள்.

மை விழி திறந்த கண்ணம்மாWhere stories live. Discover now