நீண்ட நாட்களுக்கு பின் நிம்மதியுடன் உறங்கினாள் இசை .
மறுநாள் காலை கதிரவன் செந்நிற ஒளிவீசி விடிய உறக்கம் களைந்த இசை ஒரு புன்னகையுடன் கண்விழித்தாள்.
கண்விழித்த இசை ஏதோ ஒரு உணர்வை உணர்ந்தவளுக்கு அப்போது தான் புரிந்தது இசை தன்னவன் மார்பில் தலை வைத்து படுத்து கொண்டிருக்கிறாள் என்று .
சட்டென அவன் மேல் இருந்து எழுந்தவளின் கன்னம் வெட்கத்தால் சிவக்க அவள் தன்னவனை திரும்பி பார்க்கவோ அவனோ ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தான்.
இசை பொறுமையாக எழில் அருகில் சென்றவள் அவன் நெற்றியில் முத்தமிட்டவள் என்னங்க என்ன மன்னிச்சிருங்க..அன்னைக்கு நடந்த விஷயம் என்னை ரொம்ப பாதிச்சிருச்சு அந்த காரணத்தால மட்டும் தான் நான் உங்ககிட்ட அப்படி நடந்து கிட்டேன்..ஆனா என் மனசுல இருக்க உங்க மேல வெச்ச என் காதல் என்னைக்கும் மாறாதது.. என் வாழ்க்கைல உங்கள தவிர வேற யாருக்கும் இடம் இல்லை..ஐ லவ் யூங்க நான் இத கூடிய சீக்கிரமே உங்க கிட்ட சொல்றேன் ஆனா இப்போ இல்லை என்று அவள் மனதில் நினைத்தவள் எழுந்து சென்று குளியல் அறைக்கு புகுந்து கொண்டாள்.
கண்விழித்து பார்த்த எழில் சிறு சிரிப்பை சிந்தியவன் இசை இந்த சந்தோசத்துக்காக தான் நான் இத்தனை நாள் கத்துக்கிட்டுருந்தேன்.. உன்னை காதலிச்ச எனக்கு அப்போ இருந்த மிகப்பெரிய கனவு உன்னை என் மனைவியாக்கிக்கணும் தான்... ஆனா நான் நினைச்சது போல நீ என் மனைவியா இந்த வீட்டுக்குள்ள வந்த ஆனா என் வாழ்க்கைக்குள்ள வரல.. ஆனா இன்னைலருந்து என் என் இசை என் அன்பான மனைவியா எனக்கு கிடைச்சிட்டானு நினைக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு ...ஐ லவ் யூ டி இசை என்றான் எழிலரசன் முகமலர்ச்சியுடன்..
இசை குளித்து முடித்து வெளியில் வர எழிலரசன் உறக்கத்தில் இருந்து எழுந்திருந்தவன் இசை சீக்கிரம் ரெடி ஆகு வெளிய போகலாம்
என கூறவும்..