சுவாசம் 19

508 13 0
                                    

குணசேகரும் வெங்கடேசணும் அங்கு வந்தவர்கள் விஷயத்தை அறிந்து மகிழ்ச்சியடைந்தவர்கள் இசையை ஆசீர்வதித்தனர்.

ருத்ராவும் மகிழ்ச்சியுடன் இசையை கட்டிக்கொண்டாள்..

விஜயா போன் செய்து இசையின் பெற்றவர்களிடம் கூற அவர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி..

பின்னர் விஜயா எழிலுக்கு போன் செய்தார்..

ஹலோ அம்மா... என்ன மா என்றான் எழில்..

எழில் நீ இப்போ எங்க இருக்க..

இதென்ன கேள்வி... ஆபீஸ்ல தான்.. என்றான் எரிச்சலுடன்

சரி சரி உடனே நீ கிளம்பி வீட்டுக்கு வா..

மா என்ன ஆச்சு ஏன் திடீர்னு வீட்டுக்கு வர சொல்றிங்க..ஏதாவது பிரச்சனையா...

எழில் எல்லாம் காரணமா தான் கொஞ்சம் சீக்கிரம் வாடா... என்ற விஜயா போனை கட் செய்தார்..

என்ன விஷயம் என யோசித்தவன் அங்கிருந்து விரைவாக வீட்டிற்கு கிளம்பினான்...

இசை... நீ போய் ரெஸ்ட் எடு என்ற விஜயா ஸ்வாதி இசைய ரூம்க்கு கூட்டிட்டு போ என்க இல்லை அத்தை நானே போய்கிறேன்... என்றவள் வேகமாக அறைக்கு சென்று கதவை தாழ் போட்டுக்கொண்டவள் கதறி அழ தொடங்கினாள்...

அத்தை என அழைத்து கொண்டு வந்த சுருதி அத்தை அது என்ன நீங்க இசை அக்கா மேல மட்டும் இப்படி பாசம் காட்றிங்க.. தேவி அக்கா கிட்ட இந்த மாதிரிலாம் பேசி பாத்ததில்லை... இசை அக்காவையும் உங்களையும் பாத்தா மாமியார் மருமகள் மாதிரி இல்லை.. அம்மா பொண்ணு மாதிரி தான் இருக்கு..

நீ சொன்னாலும் சொல்லலானாலும் அவள நான் என் பொண்ணா தான் பாக்குறேன்... தேவியும் எனக்கு பொண்ணு மாதிரி தான்..
ஆனா இசை அதுல ரொம்பவே ஸ்பெஷல்..எழிலுக்கு முதல் முதலா பொண்ணுப்பாக்க போன அன்னைக்கு எனக்கு அந்த பொண்ணு கலைக்கு பதில் இசையை தான் பிடிச்சது... ஆனா பெரிய பொண்ணு இருக்கும் போது சின்ன பொண்ண கேட்டா அது அவங்களுக்கு மனசு கஷ்டப்படும்னு தான் நான் எதுவும் சொல்லல..ஆனா கடவுள் இசை தான் இந்த வீட்டுக்கு மருமகள்னு முன்னாடியே முடிவு பண்ணிட்டாரு போல..

சுவாசமே நீயடி...(முடிவுற்றது)Where stories live. Discover now