இருவரும் மதிய உணவை அங்கேயே உண்டனர்.
பின் இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.
இசை தன் குடும்பத்தை பிரிய மனமில்லாமல் தன்னவனுடன் சென்றாலும் மறுபக்கம் நீண்ட நாட்களுக்கு பின் தன் குடும்பத்தை பார்த்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தாள் இசை..
ரொம்ப தேங்க்ஸ்ங்க என இசை கூற லேசாக புன்னகைத்தவன் உன் தேங்க்ஸ நீயே வெச்சுக்கோ.. என அவன் கூறிக்கொண்டே காரை ஓட்டி செல்ல அவளோ எழிலின் தோளின் மீது சாய்ந்து கொண்டாள் இசை.
தன்னவளின் நெற்றியில் இதழ் பதித்தவன் அவளை அழைத்து கொண்டு ஒரு மால்க்கு சென்றான்.
இசைக்கு தேவையான பொருட்களை எழிலரசன் வற்புறுத்தி வாங்கி கொடுத்தவன் பின் வாங்கிய பொருட்களை காரில் வைத்து கொண்டு அவளை ஒரு பெரிய தீம் பார்க்கிற்கு அழைத்து சென்றான் .
இசையும் எழிலும் அங்கு மகிழ்ச்சியுடன் மனம் விட்டு பேசி கொண்டிருக்க,
அந்த நேரம் ஒரு இளம் வயது பெண் அறை குறை ஆடையுடன் நவ நாகரீக தோற்றமுடன் எழிலரசன் அருகில் வந்தவள் ஹே.. எழில் என கத்த
ஹேய் ஹேமா நீ எங்க இங்க என எழிலரசன் கேட்கவும் வேகமாக வந்து எழிலை கட்டி பிடித்தவள் ஹவ் ஆர் யூ டா எழில் என கொஞ்சுதலாக கேட்க ஐ அம் பைன் டியர்.. வாட் அபௌட் யூ என்றான் எழிலரசன்.
இதை பார்த்த இசையின் கண்களில் கண்ணீர் தேங்க மறுபுறம் கோபம் தலைக்கேறியது..யாரு இவ என் புருஷன என் கண் முன்னாடியே இப்படி கட்டிபிடிக்கிறா சீ.. என மனதில் நினைத்து கொண்டிருக்க
ஐ அம் டூ குட் டா என்ன காலேஜ்லயே ஹண்ட்ஸமா இருப்ப இப்போ ரொம்ப அழகாயிட்ட என்ன விஷயம்.என அவள் சிரிக்க..
நான் கூட என் புருஷன இப்படிலாம் சொன்னதில்லை இவ என்னடானா இந்த அளவுக்கு ஐஸ் வெக்குறா என நினைத்து கொண்டாள் இசை.