சுவாசம் 17

516 12 0
                                    

ஓ அப்படியா உனக்கு துரோகம் பண்ண மாட்டானா.. அப்போ உன் அக்காவ கல்யாணம் பண்ணிக்க இருந்தவன் கடைசியா உன்னை கல்யாணம் பண்ணி குடிச்சிட்டு வந்து உன் கிட்ட தப்பா நடந்து கிட்டானே அதெல்லாம் தற்சயலா நடந்ததுனு நினைக்கிறியா... முட்டாள்...அப்புறம் நேத்து கூட வெளிய போனீங்களே..அது எல்லாமே பிளான் தான்.. என்ற ரம்யா  சொன்னதை கேட்டு அதிர்ந்தவள் கண்களில் கண்ணீர் பெறுகியது...

இதெல்லாம் உனக்கெப்படி தெரியும் என்றாள் இசை மெல்லிய குரலில்..

அது மட்டும் இல்லை இன்னும் என்னென்னவோ தெரியும்...ஒரு நாள் எழில் குடிச்சிட்டு என் வீட்டுக்கு வந்திருந்தான்... அப்போ அவன் உன்கிட்ட எப்படி நடந்து கிட்டானோ அதே மாதிரி தான் என் கிட்டயும் நடந்து கிட்டான்...அப்போ தான் சொன்னான்...என்ற ரம்யாவின் வார்த்தை அவள் செவியில் நெருப்பை அள்ளி போட்டது போல் உணர்ந்தவள் நோ.. நோ என்று சத்தமாக கத்தினாள் இசை..

இல்லை நீ பொய் சொல்ற என் புருஷன் அப்படிலாம் பண்ண மாட்டாரு.. அவர் ரொம்ப நல்லவரு...நான் நம்ப மாட்டேன் நான் நம்ப மாட்டேன் என கதறி அழுதாள் இசை...

அப்படினு நீ மட்டும் தான் சொல்லனும்...உனக்கு ஒன்னு தெரியுமா எழில் உன் கிட்ட எதை மறச்சாலும் எதையும் என் கிட்ட மறச்சிதில்லை...இதுலேயே தெரியல அவனுக்கு யார பிடிச்சுருக்குனு....உன் அக்கா இருக்காளே அக்கா... ஓடி கூட போனாளே...அவ ஓடி போனது எழிலோட தம்பி சிவா கூட தான்... என்றாள் ரம்யா இசையை பார்த்து..

அதிர்ச்சியில் கண்களை விரித்து பார்த்தவள் நீ பொய் சொல்ற...சிவா ரொம்ப நல்ல பையன் அவன் அப்படிலாம் பண்ணிருக்க மாட்டான்.. இசை உறுதியாக கூறினாள்..

சரி அப்போ நீ எழில் கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோ இது உண்மையா பொய்யானு..இத என்னால நிரூபிக்கவும் முடியும்.. இப்போ நினைச்சாலும் எழில வெச்சே உன்னை இங்கிருந்து என்னால விரட்ட முடியும்.. ஆனா அது அவசியம் இல்லைனு நினைக்கிறன் என ரம்யா கூறவும்..இசை எதுவும் பேசாமல் அழுது கொண்டே அங்கிருந்து ஓடி விட்டாள்....

சுவாசமே நீயடி...(முடிவுற்றது)Where stories live. Discover now