சாகா வரம்

657 74 80
                                    



     நல்லூர் பெரிய கோவிலில் நான் நுழைந்த போது பிரமித்து தான் போனேன். என்னே கட்டமைப்பு, என்னே கலையுணர்வு. உழியால் உயிருண்ட மானிடராய் சிற்பங்கள் மனதை மயக்கின. இவ்வளவு திறமையான சிற்பிகளை படைத்த பிரம்மன்அதனை ரசிக்க மனிதரை படைக்கவில்லை போலும், பார்ப்பாரின்றி இக்கோயிலும் சிற்பங்களும் பாலடைந்து போயிற்று. பால் குடிக்கும் பிள்ளையாரும் பிள்ளை வரம் கொடுக்கும் சாமியார்களும் இல்லாதலால் இங்கு பக்தர்கள் அலை மோதவில்லை. அலையில்லா ஆழ்கடலை போலவே இக்கோயிலும் தன் அதிசயங்களை உள்ளடக்கி ஊமையாய் நிற்கின்றது. எனக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்கிறீர்களா, நான் ஒரு தொல்லியல் மாணவன், என் ப்ராஜக்ட்டுக்காகவே நான் இங்கு வந்திருக்கிறேன். இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது ஆங்காங்கே இடிந்த போதும் இன்னும் ஒரு கிழட்டு சிங்கம் போல கம்பீரமாய்தான் நிற்கிறது, இதன் இத்தகைய நிலைக்கு இதை கட்டிய மன்னனும் ஒரு காரணம் என்றால் நம்ப முடிகிறதா. குறுநில மன்னன் நலஞ்செயன் கட்டிய கோயில் தான் இது, சென்ற இடமெல்லாம் வெற்றி கண்ட அவன் தவம் புரிந்து சிவனிடம் சாகா வரமும் பெற்றான். சிவனின் வரம் தான் கிரடிட் கார்டு ஆஃபர் போன்றதாயிற்றே. Terms & condition பின்னர் தானே தெரியும். அதுபோல இவன் வரமும் சாவை தடுத்ததே தவிர முதுமையை தடுக்கவில்லை அதனால் சிவன் மேல் கடுங்கோபம் கொண்டான். தடை செய்யப்பட்ட வேதங்களையும் சாத்தானையும் பின்பற்ற, அவன் மகன்களும் மனைவியும் சதி செய்து அவனை கோயிலின் ஓர் மண்டபத்தில் அடைத்து வெளியேறா வண்ணம் மந்திரக் காவல் போட்டனர். இன்று வரை அவன் தீராப் பசியுடன் இங்கே உலவுகிறான், இவ்வாறாக கதை போகிறது.
இதற்கிடையில் நலஞ்செயனை இங்கே பார்த்தேன் அங்கே பார்த்தேன் பழம் வாங்கி சாப்பிட்டான், பரோட்டா திருடினான் என ஏகத்துக்கு வதந்தி. கோயில்களில் திரிதந்தாலும் நான் என்றும் பெரியார் கட்சி தான். சாமியும் , சாத்தானும் என்னை என்றுமே ஈர்த்தத்தில்லை. இவ்வாறாக நான் எண்ணிக்கொண்டிருக்கையில் நாங்கள் பிரதான மாடத்தை அடைந்தோம், அங்கு நுழைந்ததும் காற்றில் ஈரப்பதத்தை உணர முடிந்தது. ஒரு பிரம்யமான அமைதி எங்கும் நிறைந்திருந்தது. கல்லால் ஆன அந்த மாடத்தின் மேற்கூரை ஆங்காங்கே இடிந்து இருந்தது அந்த ஓட்டைகளினூடே கதிரவன் தன் ஒளிக்கற்றையை செலுத்தி தரையில் பல ஓவியங்கள் இட்டிருந்தான். இருபுறமும் அடிக்கொரு சிற்பங்கள் எங்களை
வரவேற்க, சுயம்வரத்தில் கன்னியாய் நாங்கள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து கொண்டிருந்தோம்.
அப்போது என் நண்பன் என்னிடம் கிசுகிசுத்தான்

என் சிறுகதைகள்Where stories live. Discover now