இளவரசன்

417 72 111
                                    

பாலை மண்ணை பொன்னென உருக்கிடும் வேட்கையில் கதிரவன் வான் வெளியின் உச்சத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தான், நிழலில் மட்டுமே வளரும் பாலை மரங்களின் இலை இழந்த கிளைகளின் மேல் வல்லூறு கூடமாய் அமர்ந்து இளைப்பாரிக் கொண்டிருந்தன, கொடும் வெயிலிலும் கொடியது கொடும் பசி ஆயிற்றே, விரையும் சூரியன் உச்சத்தை அடையும் முன்னே தேடினால் தான் இரை, இல்லையேல் இவர்களே மாலை நரிகட்கும் நாய்கட்கும் இரையாக வேண்டியது தான். ஆனால் அவர்கள் வாழ்விலே சிறந்தது இந்நாள் என்று அந்த வல்லூறுகள் அறிந்திருக்கவில்லை. உண்ண தெகட்டும் அளவு உடல்கள் இன்று இன்நிலத்தில் குவியப் போகின்றன , உதிரத்தின் மழையில் நனைய போகிறோம் என்று அவை அறிந்திருக்கவில்லை. பசியின் எச்சத்தை மட்டுமே தின்று வளர்ந்த அவற்றிற்கு மனித இச்சைகளின் எச்சம் எவ்வளவு ருசிகரம் என்பது இன்னும் சில கணங்களில் தெரிந்துவிடும். உணவு தேடி அவை புறப்பட எத்தனித்த வேளை, அவர்கள் காதை பிளந்தது அந்த சங்கின் நெடிய ஒலி. பறைகளுக்கு மட்டுமே பழக்கப்பட்ட அந்த நிலம் சங்கின் கூசிடும் ஒலியில் பதறிற்று , அதனை தொடர்ந்த அந்த காலடி சத்தம் , குறிஞ்சியின் குன்றுகளில் ஒன்று எழுந்து பாலையை நோக்கி விரைவதை போன்று இருந்தது . நகரும் நொடிகளில் அந்த சத்தம் "தொம்....... தொம்....." என பெருகிக்கொண்டே வந்தது, அறுநூறு கால்கள் ஒரே பொழுதில் பூமித் தாயின் வயிற்றில் ஓங்கி மிதித்ததால் நிலமே சிறிது அதிர்ந்தது. கண் எட்டிய தொலைவில் தெரிந்த கானல் நீர், எழும் புழுதியில் கலந்து காவி வெள்ளமென மாறி கரையெங்கும் பெருகியது. அந்த புழுதி புனலில் மூழ்கியவாறு காலாட்படை கண் எட்டும் தூரம் எங்கும் நிறைய , அவர்களுக்கு பின்னே குதிரை படை மெல்ல வெளிவர தொடங்கியது, குதிரைகள் காலாட்படையின் கேடயங்களால் மறைக்கப்பட, குதிரைவீரர்கள் காலாட்படையின் தோலில் ஏறி மிதந்து வருவது போல தோன்றினர். இவற்றையெல்லாம் கண்டு மெய்மறந்த கண்களுக்கு மோட்சம் கொடுப்பது போல இருந்தது குதிரை வீரர்களை தொடர்ந்து வெளிப்பட்ட அந்த தங்க ரதம், எட்டு குதிரைகள் இழுத்து வர, வெண்ணிலவை வார்த்து எடுத்ததை போன்ற ரதத்தில், தங்கமும் ரத்தினங்களும் சுட்டெரிக்கும் சூரிய ஒளியில், பகல் பொழுதில் வழிதவறிய விண்மீன்களாய் ஜொலித்தன.

கொற்றவைजहाँ कहानियाँ रहती हैं। अभी खोजें