பகுதி 3

1.1K 99 68
                                    

தன் மகனின் உயிரற்ற உடலை செழியனிடம் காட்டிய அமைச்சர் சிறு குழந்தை போல் தேம்பி அழ துவங்கினார்.அவரை தேற்ற வழி தெரியாமல் அமைதி காத்த செழியன், அவரை விட்டு விலகி வந்து அந்த அறையை ஆராயத்துவங்கினான்.

பின்பு தன் வழக்கமான மிடுக்குடன் காவல் நிலையத்திலிருக்கும் சித்தார்தை அழைத்து உடனே அமைச்சரின் வீட்டிற்கு வருமாரு ஆணையிட்டு விட்டு மீண்டும் அமைச்சரை அனுகினான்," சார் நீங்க தைரியமா இருக்க வேண்டிய நேரத்தில உடைஞ்சு போகலாமா?? உங்க பையனோட மரணத்துக்கு உங்களுக்கு ஞாயம் கிடைக்கனும் அப்படீனு நீங்க நினைச்சா?? நம்ம உணர்ச்சிகளை அடக்கனும், அப்பறம் முக்கியமா இந்த மரணத்தை பத்தி யாருக்கும் எதுவும் இப்ப சொல்ல வேண்டாம், " என்று கூறி சிறு இடைவேளை விட்டான்.

அவனை நிமிர்ந்து பார்த்த அமைச்சர் ," கமிஷனர் சார் நீங்க சொல்றது சரிதான் ஆனால் என்னால என்னை கட்டுபடுத்த முடியலையே??" என்று மீண்டும் உடைந்தார்.

இம்முறை செழியன் கலங்கவில்லை மாறாக அவரின்.அருகில் அமர்ந்து அவரின் கைகளை பிடித்துக்கொண்டான்," சார் என்னோட பத்து வயசுல இழந்த என் தந்தைகாக இன்னும் நான் ஒரு சொட்டு கண்ணீர் விடலை, அதுக்காக அவர் மேல பாசம் இல்லாம இருக்கேன் னு அர்த்தம் இல்லை, என்னோட உணர்ச்சிகளை நான் வெளிக்காட்ட விரும்பலை, அதே மாதிரி தான் இப்ப உங்க நிலையும் , உங்க மகனோட இறப்பை பத்தி நீங்க அதிகமா வெளிப்படுத்துறது நல்லது இல்லை, அது மட்டும் இல்லை இப்ப நான் என்ன செய்ய சொல்றேனோ அதுமாதிரியே நீங்க கீழே போய் உங்க உறவினர்கள் கிட்ட பேசனும், நல்லா நியாபகம் வச்சிக்கோங்க உங்க உணர்ச்சிகளை இந்த அறையிலயே புதைச்சுடனும்," இவ்வாறு கூறியவன் தன் ஆறடி உயரத்தில் நிமிர்ந்து நின்றான்.

அந்த அறையிலிருந்து வெளியேறிய செழியனை எதிர்கொண்ட சித்தார்த் மரியாதை நிமிர்த்தமாக சலியூட் அடித்தான்.

" வாங்க சித்தார்த்,அமைச்சர் என் கிட்ட தனிப்பட்ட முறையில கொடுத்த புகாரை  விசாரிக்க எனக்கு உதவி செய்ய நீங்க தயாரா?", என்ற கேள்வியில் சித்தார்தை பேச்சிழக்கச்செய்தான் செழியன்.

மூன்றாம் கண்( முடிவுற்றது)Where stories live. Discover now