பகுதி -11

994 83 50
                                    

சித்தார்தை தொடர்ந்து சென்ற செழியன் அங்கே கண்டது வாயில் நுரை தப்பி கை கால்களை இழுத்துக்கொண்டிருந்த முருகனை.

" இப்படி பாத்துக்கிட்டே இருந்தா என்ன அர்த்தம் சீக்கிரமா ஆம்புலன்ஸூக்கு சொல்லுங்க , யாராவது அவன் கையில எதாவது இரும்பு கொடுங்க..,சித்தார்த் இரண்டு கான்ஸ்டபிள அவனோட காவலுக்கு அனுப்புங்க,"என்று வேகமாக கட்டளைகளை பிறப்பித்தான்.

சிறிது நேரத்தில் அந்த அலுவலகம் தன் பரபரப்பை இழந்து பழைய நிலை அடைந்திருந்தது.காவலர்கள் அனைவரும் வரிசையில் பயத்துடன் நின்றிருக்க அவர்களின் முன் அனல் கக்கும் பார்வையுடன் செழியன் நின்றுகொண்டிருந்தான்.

" இத்தனை போலீஸ்காரங்க இருக்குற கமிஷனர் ஆபிஸுக்குள்ள ஒருத்தன் தைரியமா வந்து நம்மலோட பாதுகாப்புல இருக்குற ஒரு விசாரனை கைதிக்கு விஷம் கொடுத்திருக்காங்க , ஆனால் நீங்க யாரும் அதை பார்கலை??இதை நான் நம்புனும் னு நினைக்கிறீங்களா?? இல்லை நம்பாம உங்களுக்கு நம்ம ட்ரீட்மென்ட் நானே கொடுக்கனும் னு நினைக்கிறீங்களா??என்று கோபத்துடன் வினவினான்.

அங்கிருந்த ஒரு கான்ஸ்டெபிள்," சார்...
நேத்து நைட்.நீங்களும் சித்தார்த் சாரும் விசாரிச்சிட்டு.போனதுக்கு அப்பறம் செந்தில் சாரோட கண்கானிப்புல தான் அவன் இருந்தான், அவருக்கு நைட்டியூட்டி வேற அதனால அவரு.அவனை கவனிச்சிக்கிட்டுதான் இருந்தாரு," என்று கூறினான்.

" செந்தில் ....இங்க வாங்க," என்று அழைத்தான் சித்தார்த்.

" சொல்லுங்க செந்தில் ஒரு விசாரனை கைதி கொலை செய்யப்டுறது நமக்கு தான் அசிங்கம் உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்க ,அவனை பார்க்க.யாரும் வந்தாங்களா??சந்தேகப்படுற மாதிரி அவனுடைய நடவடிக்கை இருந்துச்சா??"என்று சரமாரியாக கேள்விகளை அடுக்கினான் செழியன் அவனுடைய முகத்தில் இயலாமை நன்றாக வெளிப்பட்டது.

அவனுடைய சரமாரி கேள்விகளை உள்வாங்கிய அந்த கான்ஸ்டபிள் செந்தில்," சார் சித்தார்த் ஐயா சொன்ன மாதிரி நான் அவனை கவனமா கண்கானிச்சேன், அவனோட நடவடிக்கையில எந்த சந்தேகமும் எனக்கு வரலை , ராத்திரி சாப்பாடு வாங்கி கொடுத்தேன், காலையில ஒன்னும் சாப்பிட கொடுக்கலை அவனா தான் டீ வேணும் னு கேட்டான் , அதான் வாங்கி கொடுத்தேன்," என றவரை இடைமறித்த செழியன்," கம் அகெயன்...டீ வேணும் னு அவன் கேட்டானா...??" என்று மீண்டும் வினவினான்.

மூன்றாம் கண்( முடிவுற்றது)Where stories live. Discover now