🕵33🕵

681 87 102
                                    

இரு கைகளையும் உயரே தூக்கி லேசாக சோம்பல் முறித்தபடி திரும்பிய ஜெய், மணியின் ஆராயும் பார்வையில் சட்டென்று கைகளை கீழே போட்டான்.

"என்ன பார்வை? சீக்கிரம் போய் டிபன் எடுத்து வை போ!" என்று மிடுக்குடன் அவளை அதிகாரம் செய்தான்.

'பாருடா அதிகாரத்தை...' என உள்ளுக்குள் வியந்தவள், "இட்லி ஊற்றி வைத்து விட்டு தான் அத்தை மிக்ஸியில் சட்னி அரைக்கிறார்களாக இருக்கும்!" என்றாள் அமைதியாக.

அவளின் பார்வையை தவிர்க்க வேண்டி, "சரி அதற்குள் நான் போய் டிரஸ் சேஞ்ச் பண்ணுகிறேன், திலக் நீயும் போய் யூனிபார்ம் மாற்று போ!" என்றபடி எழுந்து தன்னறைக்கு சென்றான் ஜெய்சங்கர்.

அவன் கண்ணை விட்டு மறையும் வரை யோசனையோடு விழிகளால் தொடர்ந்தவள் பின் திரும்பி திலக்கை கவனித்தாள்.

ஜெய் உரைத்ததை காதிலேயே வாங்காதவன் போல அசட்டையாக இருந்தவனின் கன்னம் வருடியவள், "என்னடா செல்லம் சித்தப்பா சொன்னது காதில் விழவில்லையா அப்படியே உட்கார்ந்து இருக்கிறாய்? போய் டிரஸ் மாற்று, இல்லை... சித்தி வந்து மாற்றிவிடவா?" என்று அக்கறையுடன் வினவினாள்.

"வேண்டாம் சித்தி... நானே மாற்றிக் கொள்கிறேன்!" என்று எழுந்தான்.

அவனுடைய தளர்ந்த நடையை கண்ணுற்றவளின் நினைவில் மீண்டும் ஜெய்யின் வார்த்தைகள் எதிரொலித்தது.

'அப்படியென்ன பெயின்டிங்கில் கேம் விளையாடினார்கள்... அதுவும் மயக்கம் வருமளவுக்கு? இவருக்கும் இல்லை மயக்கம் வந்ததாம் இதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது? நானும் இரண்டு நாட்களாக கவனித்துக் கொண்டு தானிருக்கிறேன், அன்று இரவிலிருந்தே இவர் ஏதோ சரியில்லை. திலக்கை நானே பள்ளியில் இருந்து அழைத்து வந்து விடுகிறேன் என்பவர் நேராக வீட்டிற்கு வருவதேயில்லை. அங்கே இங்கே என சுற்றிவிட்டு தினமும் தாமதமாக வருவது, என்ன பழக்கம் இது? அவன் ஹோம்வொர்க் கூட செய்யவில்லை, சாப்பிட்டவுடன் தூங்கப் போகிறான்!'

என்னை தெரியுமாDove le storie prendono vita. Scoprilo ora