இதுவரை: பிருத்வியை பின்தொடரும் பொழுது சிக்கும் ஸ்ரேயா, அவளை காக்கும் குணால்..
______________________________________
இனி,
ஸ்ரேயா: வா என் கூட
குணால்: எங்கே ஸ்ரேயா?
குணாலின் கை யை பிடித்து தர தர வென இழுத்துச் சென்ற ஸ்ரேயா, கடைசியில் ஒரு தள்ளுவண்டி கடை முன் நின்றாள்..
குணால்: என்னாச்சு ஸ்ரேயா? நடக்க முடியலியா?
ஸ்ரேயா: லூசு , இந்த கடைக்கு தான் உன்னை கூட்டிட்டு வந்திருக்கேன்.
குணால்: எதுக்கு?
ஸ்ரேயா: எனக்கு உதவி செய்யறவங்களுக்கு 2 செட் பானி பூரி வாங்கி தர்றது என்னோட பழக்கம்..அதான் உன்னை இங்க கூட்டிட்டு வந்திருக்கேன்..
குணால்: வித்தியாசமா இருக்கே இந்த பழக்கம்..ஒருவேளை அவங்களுக்கு பானி பூரி புடிக்கலனா?
ஸ்ரேயா: குல்ஃபி ஐஸ் வாங்கி தருவேன்.
குணால்: ஒருவேளை அவங்களுக்கு டான்சில்ஸ் இருந்தா?
ஸ்ரேயா: விஷம் வாங்கி தருவேன்..இப்ப எதுக்கு இப்படி துருவி துருவி கேள்வி கேக்கற குடுமி? குப்பு அண்ணா மூனு செட் பானி பூரி.
குணால்: எப்பா உன்கிட்ட உஷாரா தான் இருக்கனும் போல...சரி மூனு எதுக்கு நம்ம 2 பேர் தான இருக்கோம்?
அவன் மண்டையில் ஓங்கி கொட்டினாள் ஸ்ரேயா..
குப்பு: ஸ்ரேயா கண்ணு பாவம் வலிக்கப் போகுது.
குணால்: ம்ம்ம் வலிக்குது..எதுக்கு இப்ப கொட்டின ஸ்ரேயா?
ஸ்ரேயா: உன் கிட்ட இப்ப தான சொன்னேன்..உதவி செய்றவங்களுக்கு 2 செட் னு..உனக்கு மட்டும் வாங்கி குடுத்திட்டு நீ சாப்பிடறத நான் வேடிக்கை பார்க்கனுமா? மக்கு...
குணால்: ஓஓஓ சரி ஸ்ரேயா..அப்ப மூனு தான்.. :)
தட்டில் வைத்த பானி பூரியை, குணால் வாயருகே கொண்டு செல்வதற்குள் , புதினா தண்ணீரின் கனத்தால் பூரி உடைந்தது..
YOU ARE READING
மாங்கல்யம் தந்து னானேனா 💕🔔🔥🎊🎉😍
Fanfictionஸ்ரேயா , சரியாக திட்டமிடாததால் தன் அக்காவின் திருமணம் நின்று போனதால் , "மாங்கல்யம் தந்து னானேனா" என்று திருமண திட்டமிடும் மையம் ஒன்றை ஆரம்பிக்கிறாள்.😊 தன்னை சுற்றியுள்ள அனைவரையும் எப்போதும் சந்தோஷமாக வைத்திருக்கும் சுட்டிப்பெண். 😊 குணால் சிங், தன்...