தீயாய் சுடும் என் நிலவு 20

2.8K 132 15
                                    

"என் தப்பு தான். அதுக்கான தண்டனையை தான் இந்த மூணு வருஷமா அனுபவிச்சிட்டு இருக்கேன். இப்ப எனக்கு ஒரு பொண்ணும் இருக்கா. என்ன நடந்தாலும் சரி மிருதியோட கோவத்தை மாத்த முயற்சிப்பேன்." என்றான் தீரன்.

"எனக்கு உங்க மேல கோபம் இருக்கு. இருந்தாலும் தி காக தான் இதெல்லாம். என்னன்னு பார்க்குறிங்களா? அவா நினைச்சிருந்தா உங்க மேல போலீஸ் கம்ப்பிளைன்ட் கொடுத்திருக்கலாம். ஆனா, அவ அதை செய்யலை செய்யவும் மாட்டா. ஏன்னா நீங்க எப்படியோ அவ உங்கமேல உயிரையே வச்சிருக்கா. உங்களால் அவளோட அப்பாகிட்டையே மாசகணக்குல பேசாம இருந்தா. இதெல்லாதுக்கும் மேல மிதிஷான்னு உங்க ரெண்டு பேரோட முதல் எழுத்தோட உங்க பொண்ணுக்கு பேர் வச்சிருக்கா." என்றான் அமுதன்.

"ஐயோ" என்று தலையில் அடித்துக்கொண்டு கண்கலங்கினான் தீரன்.

"நான் இதெல்லாம் என் சுயநலத்துக்காகவும் செய்யறேன்னு சொல்லலாம். என் பிரென்ட் தி நல்லா இருக்கனும். உங்களை தவிர வேரேந்த ஆணுக்கும் அவா வாழ்க்கைல இடம் இல்லன்றதை நான் புரிஞ்சுகிட்டேன். நான் இங்கே வந்ததோ உங்ககிட்ட பேசினதோ அவ்ளுக்கு எக்காரணுத்துக்காகவும் தெரியக்கூடாது. தெரிஞ்சா இங்க இருக்கமாட்டா. அவ ரொம்ப காய பட்ருக்கா. நீங்க போய் நீங்க உடனே உங்களை மன்னிச்சு ஏத்துப்பான்னு சொல்ல முடியாது. நீங்க வெய்ட் பண்ணி தான் ஆகணும். உங்களோட அன்பை அவளுக்கு புரிய வைங்க. என்னால முடிஞ்ச வரைக்கும் அவா சாய்ஞ்சு அழறதுக்கு தோழனாக தோள் கொடுத்து தூக்கி விட்ருக்கேன். எல்லாமே என்னால முடிஞ்சவரைக்கும் செஞ்சுருக்கேன். என்னால முடியலைன்னா இதோ எனக்கு கடவுள் கொடுத்த வரமா இருக்க என் ஸ்ரீ செஞ்சுருக்கா. இனி நீங்க தான் அவளோட காயத்துக்கு மருந்தா மாறனும்." என்றான் அமுதன்.

"இப்போ நான் சொல்றதை கொஞ்சம் கவனமா கேளுங்க" என்றான் அமுதன்.

"சொல்லுங்க" என்று அமுதனை பார்த்தான் தீரன்.

நீங்க போய் நின்னவுடனே நிச்சயமா தி எவ்ளோ முடியுமோ அவ்ளோ இன்சல்ட் பண்ணுவா உங்களை. அவளும் அதுக்கு கஷ்ட படுவா. ஆனா அவளோட டார்கெட் நீங்க அவ லைஃப்ல திரும்பி வரக்கூடாது அவ்ளோதான்."; என்றான் அமுதன்.

தீயாய் சுடும்  என் நிலவு - (முழுதொகுப்பு)Where stories live. Discover now