அதிகாலையில் கதிரவன் தன் கதிர்களை அந்த அழகிய மலை தொடர்ச்சிகளுக்கு நடுவே தன் ஆதிக்கத்தை செலுத்த வேண்டும் என்று முயர்ச்சி செய்து கொண்டிருந்த வேலையில். தென்றல் காற்று வீச, வயலில் நெற்கதிர்கள் ஒன்றோடு ஒன்றாக பேச, குருவிகள் அதன் குஞ்சுகளுக்கு இரை ஊட்ட, எழில் கொண்ட தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் என்னும் கிராமத்தில், அனைவரும் துயில் எழும் வேளையில், அந்த அரண்மனை போன்ற வீட்டில் இருந்து, தன் முகத்தை மறைத்த படி ஒரு இளம்பெண் தனது கைப்பேசியில் " Hey am coming out of the house... wait backside with a car" என்று கூறினாள்.
அவள் வீட்டின் பின்புற சுவரிற்றில் ஏறும் வேளையில், "ஏய்!!.. akshara எங்க சுவர் ஏறி போற" என்று ஒரு வயதான குரல் கெட்க, "ஐயோ!!.. அக்க்ஷரா செத்தடி நீ... பாட்டி வேற பாத்துடாங்களே... விடு ஜூட்" என்று வேகமாக சுவரேறிக் குதித்த அவள் காரில் அமர்ந்து "சீக்கிரமா கார்ர ஸ்டார்ட் பண்ணு டா எரும" என்று கூறல் எழுப்ப, அந்த காரில் இருந்த ஜெய்" ஏய் என்ன ஆச்சு லூசு" என்றான். "ஹிட்லர் பொண்டாட்டி பாத்துடாங்க டா!! ஜெய் எஸ்கேப்.. " என்று அவள் கூற காரை இருவரும் ஓட்டிச்சென்றனர்.
( யார் அவுங்க எங்க போறங்க என்பதை அப்பறம் பார்க்கலாம், இப்போ அங்க வீட்டில் என்ன கலவரம் நடக்குதுன்னு பாருங்க).
"எல்லாரும் எங்க இருக்கிறீங்க" என்று கத்திக் கொண்டே அக்கிழவி வீட்டிற்குள் ஓடிவந்து, அங்கே இருக்கும் அவரது இரு மகன்கள் மற்றும் மருமகள்களிடம் நடந்ததைக் கூற, அங்கு ஊர் கலவரமானது. அனைவரும் அக்க்ஷரா வை தேட, அதில் ஒருவர் மட்டும் அனைத்தயும் பார்த்து மர்ம சிரிப்பு சிரித்தபடி அவர்களுடன் சேர்ந்து அவளை தேடுவது போல் நடித்தார்.
Please comment &vote பன்னுங்க என் தவர்களை திருத்திக்கொள்ள முடியும்.
YOU ARE READING
நினைவுகள் நிஜமாகும்(on Hold)
Humorஇது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் sorry.இந்த கதை மூன்று பெண்கள் மற்றும் அவர்களின் நட்பு, காதல்,குடும்பம் பற்றிய கதை. "ஏய்!!.. akshara எங்க சுவர் ஏறி போற" "ஐயோ அக்க்ஷரா செத்தடி நீ... பாட்டி வேற பாத்துடாங்களே... விடு ஜூட்" "ஹிட்லர் பொண்டாட்டி ப...