நினைவுகள் 9

623 20 0
                                    

இரவு ஆண்கள் வீடு 🏘வந்ததும் நந்தினியை பற்றி பேசி கொண்டே இரவு உணவை முடித்து விட்டு அனைவரும் படுக்க சென்றனர். நள்ளிரவில் கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்தனர்.

யார் இந்த நேரத்தில் என எண்ணியபடி அனைவரும் hallலின் கதவை திறந்து பார்த்த போது அனைவரும் சந்தோசத்தில் உறைந்தனர். "கண்ணா ப்ரித்வி... என்ன பா நாளைக்கு தா நீ வருவனு சொன்னாங்க, உடம்புக்கு ஒன்றுமில்லையே.. " என மீனு பாட்டி கேட்க.

"பாட்டி நா ரொம்ப நல்லா இருக்கேன்... உன்ன ரொம்ப மிஸ் பன்னேன் னா அதான் ஓடி வந்துடேன், அது மட்டும் இல்லாம இங்க மூன்று👹👹👹 ராச்சசிகளை உன்னால தனியா சமாளிக்க முடியாதுல.. அதான்.. " என கூறி கொண்டே அவர்கள் மூவரையும் பார்க்க, அவர்கள் இவனை அடிக்க துரத்தும் போது அவர்களுக்கு போக்கு காட்டி பின் அவர்களிடம் செல்ல அடிகளை பெற்றுக் கொண்டான்.

தாத்தா "போதும் உங்க விளையாட்டு, எல்லாரும் போய் படுங்க.. காலைல பேசிகளாம்... "என்று கூறி தன் அறைக்கு சென்றார்.

இளையவர்கள் அனைவரும் ப்ரித்வி அறைக்கு சென்றனர். (இன்னும் ப்ரியா ஹனி,அம்மு இருவரிடமும் பேசவில்லை)

சில நிமிடம் ப்ரித்வியிடம் பேசி விட்டு "ok படிப்ஸ் நான roomக்கு போரேன் நீ rest எடு" என்றுக் கூறி தன் பார்வையை அம்மு மற்றும் ஹனியிடம் 'வரிங்களா' என்பது போல் ப்ரியா பார்க்க, அவள் கண் அசைவுகளை புரிந்து கொண்ட ஹனி, தன் அண்ணனிடம் "டெய் buff.. அர்ஜூன் அண்ணாவும் ஊருக்கு வந்துருக்காங்களா??!!.." எனக்கேட்டு பின்னர், ஆர்வமாக ப்ரியாவை பார்க்க அவள் முகத்தில் வந்து போன களைவையான உணர்ச்சியை பார்த்து அம்முவை இடித்து அவளை காணுமாரு சைகை செய்தாள்.

ப்ரித்வி "இல்ல.. அவன் Bangaloreல ப்ரண்டு வீட்டுக்கு போயிருக்கான்.. " என கூறியவுடன் ப்ரியாவின் முகம் ஒரு நிமிடத்துக்கு வாடியதை கண்ட ஹனியும் அம்முவும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டு, சிறிதுநேரம் பேசி விட்டு ப்ரியாவுடன் அவர்கள் அறைக்கு படுக்கச் சென்றனர்.

நினைவுகள் நிஜமாகும்(on Hold)Where stories live. Discover now