13

1.9K 95 3
                                    

காதலர் தினம்

"மொதல்ல உன் கோபத்தை குறைக்கணும்டா நீ.. எவ்ளோ சிரிக்கறயோ அவ்ளோ சீரியஸாவும் ஆயிடற.. என்ன இருந்தாலும் பதினெட்டு வயசுக்கு இத்தனை கோபம் ஆகாது உனக்கு.."

அவன் மார்பில் சாய்ந்தவாறு சொல்லிக்கொண்டிருந்தாள் அவள்.

கல்லூரி முடிந்த பிறகு வெளியில் போகாமல் அங்கேயே பூங்காவில் ஒரு பெஞ்ச்சில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர் இருவரும்.

விஷ்வா புன்னகைக்கவில்லை.

"உன் ப்ராஜெக்ட், ஹோம்வர்க், அஸைன்மென்ட் எல்லாத்தையும் முடிச்சிட்டு வா, நான் வெய்ட் பண்றேன்.."

"ப்ச்.. விஷ்வா--"

"இல்ல மஹி, கோபம் இல்ல, நான் சந்தோஷமா தான் சொல்றேன். நமக்கு இன்னும் நிறைய டைம் இருக்கு. காத்திருக்கறதுல கவலையில்ல."

வார்த்தையால் சொன்னாலும், குரலில் தொய்வு இருக்கத்தான் செய்தது.

****

உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே...
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே...

பேருந்தில் ஒலித்த பாடல் மஹிமாவைக் கவரவில்லை.

விஷ்வா பைக் வாங்கிவிட்டதால் இப்போது அவள் மட்டும்தான் தனியாகப் பேருந்தில் கல்லூரிக்குச் சென்றாள். விஷ்வா அவளையும் தன்னோடு வர அழைத்தாலும், அப்பா முன்னால் அவனோடு பைக்கில் செல்வது ஆபத்து என மறுத்துவிட்டாள்.

மற்ற நாட்களில் இருந்த உற்சாகம் இப்போது ஏனோ குறைந்திருந்தது. தேர்வுகள் பாடங்கள் என மஹிமாவின் நாள்காட்டி நிறைந்திருந்தது.

கட்டிடங்களை வெறித்துப் பார்த்துக்கொண்டே ஜன்னலோரம் அமர்த்திருந்தவள், தங்கள் ஸ்டாப்பிங் வந்ததும் எழுந்தாள்.

கல்லூரி நிறுத்தத்தில் இறங்கிய மஹிமா, அங்கே நின்றிருந்த விஷ்வாவைக் கண்டு வியந்தாள்.

மெய்மறந்து நின்றேனேWhere stories live. Discover now