16

1.8K 89 10
                                    

நகரும் நதிகள்

'எங்கே தவறு செய்தோம்?'

யோசித்து யோசித்து மண்டை வெடிப்பது போலிருந்தது அவளுக்கு.

'என்ன பேசினோம்? ஏன் அவன் கோபப்பட்டான்? எதற்காக கொஞ்சமும் தயக்கமின்றி அத்தகைய வார்த்தைகளை நம்மீது கொட்டினான்? இது அவனது முன்கோபமா? இல்லை நிஜ சொரூபமா? இதுதான் அவனா? நாம்தான் கவனிக்கவில்லையா?

பேருந்தில் எப்படியோ ஏறி வீட்டு நிறுத்தத்தில் இறங்கும் வரை எல்லாம் அவளுக்கு இயந்திரத்தனமாக நடந்தது. காட்சிகள் எதுவுமே மூளையில் பதியாமல் மங்கலாகவே இருந்தன. வீட்டை நெருங்க நெருங்க, அவளது உணர்ச்சிகள் பீறிட்டு எழுந்தன. தான் உயிருக்குயிராக நம்பிய, நேசித்த ஒருவன், தன்னை ஒரு கணத்தில் தூக்கியெறிந்ததை அவளால் தாங்க முடியவில்லை.

பங்கஜம் அம்மாளுக்கு பதிலளிக்காமல் வேகமாய்ச் சென்று கட்டிலில் விழுந்தாள் அவள்.

அழுகையோடு அவள் மனதும் கரைவதுபோல் இருந்தது. பங்கஜம் அம்மாள் அவளருகில் ஆதரவாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

என்னாச்சு என்று அவர் கேட்க, அவள் நா வரையில் வந்த பதில்,

"துரோகம்"

ஏதும் பேசாமல் அவள் அழுதுகொண்டே இருந்தது பங்கஜம் அம்மாளைக் கவலையில் ஆழ்த்தியது.

அவள் அப்பாவுக்குத் தெரிந்தால் அவரும் வருத்தப்படுவார். முடிந்தவரை அவளது அழுகைக்கான காரணத்தை அகற்ற, அழிக்க முயன்றிடுவார். ஆம், தன் மகளை இப்படிக் கரைய வைத்ததன் காரணம் அறிந்தால்...

ஆனால் இவள் என்னவென்று சொல்லவேண்டுமே!

மஹிமா கொஞ்ச நேரம் அழுது கொண்டிருந்தாள். திடீரென்று எழுந்து சென்று அலமாரியில் இருந்து தன் கதைநோட்டை எடுத்தாள். அதை நூறுதுகளாகக் கிழித்து எறிந்தாள்.

'இல்லை... காதல் இதில் இருப்பதுபோல் இல்லை!!  இனிமைகளும் இன்பங்களும் மட்டும் இருக்குமென்பது பச்சைப் பொய்!! அத்தனையும் வேஷம்! காதல் பொய், காட்சிகள் பொய், அவ்வளவும் பொய்!!'

மெய்மறந்து நின்றேனேWhere stories live. Discover now