18

1.7K 89 2
                                    

வைகாசி நிலவே

திருமணப் பர்சேஸ்கள் அமர்க்களமாக நடந்தன. திருநெல்வேலியில் திருமணம் என்றாலும், திருமண நகைகள், ஜவுளிகள், பாத்திர பண்டங்கள், இத்தியாதி இத்தியாதிகள் என அனைத்தையும் சென்னையில் தான் வாங்க வேண்டுமென நின்றார் அன்னபூரணி.

சர்வேஸ்வரன் சொன்னதால் விஷ்வா முன்வந்து தானே அனைத்து கடைகளுக்கும் அனைவரையும் அழைத்துச் செல்வதாகச் சொன்னபோது, எல்லாருமே கொஞ்சம் ஆச்சரியப்படத் தான் செய்தனர். விஷ்வா தனக்குள் புன்னகைத்துக்கொண்டான்.

விஷ்வா இயல்பாகவே துடுக்காகப் பேசுபவன் என்றதால் அவனுக்கு அனைவரிடமும் கலந்து பழகுவது எளிதாகவே இருந்தது. தன்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பென இதைக் கருதித் தன் முழுத் திறமையையும் இதில் காட்ட முனைந்தான்.

அனைவரையும் ஒழுங்குபடுத்தி ஒவ்வொரு கடைக்கும் பிரிவு பிரிவாக அழைத்துச் சென்று, அழகாக அனைவருக்கும் தேவையானவற்றை வாங்க வைத்து, அவர்களது தேவைக்கேற்ப ஆலோசனைகள் கூறி, அனைவரையும் நேரத்தில் சரியாக சாப்பிடவும் அழைத்துச் சென்று, அன்று தன் நிர்வாகத்தன்மை, ஆளுமைத்திறன், பொறுப்பு என அனைத்தையும் நுட்பமாக அவன் வெளிப்படுத்த, வாயடைத்துப்போயினர் அவனது அன்னையும் தந்தையும்.

"டே விஷ்வா.. நீயாடா இது? சாப்பிட்ட தட்டைக் கழுவாமப் போற பையன், இன்னிக்கு என்னடான்னா ஊரையே கூப்பிட்டு சாப்பிட வைக்கற, பில்லும் கட்டற.. கரெக்டா ஒவவொருத்தருக்கும் என்ன தேவைன்னு கவனிச்சு செய்யுற.. எப்டிடா?"

"அதெல்லாம் அப்படித்தான்!"

சந்தோஷமாக வீடு திரும்பி அண்ணனிடம் பேச ஓடிவந்தான் அவன்.

சர்ப்ரைஸ் என்று சத்தமெழுப்பாமல் அவரது அறைக்குள் நுழைய, அவரோ– யாரும் இல்லை என்ற தைரியம்போலும்– தன் வருங்கால மனைவியிடம் ஃபோனில் கடலை போட்டுக் கொண்டிருந்தார்.

மெய்மறந்து நின்றேனேWhere stories live. Discover now