29

1.7K 88 10
                                    

மாயங்கள்

மஹிமா விமான நிலையத்தின் முன்பக்க ரிசெப்ஷன் லவுஞ்ச்சை அடைந்து,  தன் கைப்பையில் இருந்து அலைபேசியை எடுத்து, அதை ஃப்ளைட் மோடில் இருந்து விடுவித்தாள். தன் பெயர் தாங்கிய பலகை ஏதேனும் உள்ளதா என்று தேடியபடியே நடக்கலானாள்.

தூரத்தில் ஆங்கிலத்தில் தன் பெயரை ஏந்திய அட்டையைக் கண்டு அதை நோக்கி நடக்க எத்தனித்தவளை, வேறொரு பலகை தடுத்து நிறுத்தியது. அதில் 'மஹிமா' என்று தமிழில் எழுதியிருந்தது. அப்பலகையை ஏந்தியவனின் முகத்தைப் பார்த்தாள் அவள்.

மஹிமாவுக்கு அதிசயங்களில் நம்பிக்கை இருந்தாலும், இப்படி ஒரு அதிர்ச்சியை எதிர்பாராததால் ஸ்தம்பித்து நின்றாள்.

மெல்லிய புன்னகையுடன் கண்ணில் சிறு பதற்றத்துடன் கையில் தன் பெயரை ஏந்தி நின்றிருந்த விஷ்வாவைக் கண்டதும் அவளுக்கு அதிர்ச்சி, வியப்பு, ஆத்திரம், எல்லாம் கலந்த உணர்வு நெஞ்சை முட்டியது.

தகிக்கும் கண்களால் எரித்துவிடுமாறு அவள் பார்க்க, விஷ்வா முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது. அவளை நெருங்க முடியாதவாறு இடையில் தடுப்புகள் வேறு இருந்தன.

இருகணங்கள் செயலற்று நின்றவள், சுயநினைவு வரப்பெற்று, பிடிவாதமாக அவனைத் தவிர்த்துவிட்டு, தன் தந்தையின் நிறுவனப் பணியாளரை அணுகினாள் அவள்.

"Hello.  I'm Mahima"

"Ohh.. Warm Welcome Madam. My name is Narayanan" என்று அந்தப் பையன் கைகொடுத்தான்.

சின்ன வயதாகத் தெரிந்தது அவனுக்கு. பைகளை அவனிடம் கொடுத்தாள் அவள். அவனிடம் மேற்கொண்டு பேசும் முன்னர் விஷ்வா அவளை நெருங்கியிருந்தான்.

"சார், இவங்ககூட நான் கொஞ்ச நேரம் பேசணும்"

விஷ்வா அவளைப் பார்த்தவாறே பேசினான்.

நாராயணன் அவனை ஏற இறங்க ஒருமுறை பார்த்துவிட்டு, திரும்பி மஹிமாவிடம், "மேடம், மீக்கு தெலுசின வாரா( உங்களுக்கு தெரிஞ்சவரா)?" என்று சன்னமான குரலில் கேட்டான்.

மெய்மறந்து நின்றேனேWhere stories live. Discover now