39

1.7K 90 3
                                    

வீசு பூங்காற்றே

வேணி அடுத்த நாள் காலையிலேயே இருவரிடமும் விடைபெற்று பாரிஸ் சென்றுவிட்டாள். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்திற்கு மீறிய கூட்டம் லண்டன் சாலைகளில் தென்பட்டது. வேணியை விமானத்தில் அனுப்பி வைத்துவிட்டு, மஹிமாவையும் விஷ்வாவையும் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு வந்துகொண்டிருந்தது கால்-டாக்சி.

மஹிமா விஷ்வாவைக் கண்கொட்டாமல் பார்த்திருந்தாள்.

"விஷ்வா... நீ இன்னும் அத மறக்கலையா?"

"ம்..என்ன?"
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விஷ்வா ஓசைகேட்டுத் திரும்பினான். "எதை மறக்கலையா?"

"நடிக்காத... நாம ஸ்கூல்ல படிச்சப்ப நான் கதை எழுதினத உங்கிட்ட சொல்லல..அதை நீ மறந்துட்டன்னு நெனைச்சேன்"

"அத உன்ன குத்திக் காட்டணும்னு நான் சொல்லல மஹி... அவளுக்கு ஒரு ஆறுதலா இருக்கும்னு சொன்னேன். நீதான சொல்லுவ, வாழ்க்கைல சில பக்கங்கள் பர்சனல்னு.. அதைத்தான் மீன் பண்ணேன். அவ்ளோதான்."

"என்மேல கோபம் இல்லயே?"

"என்ன மஹி, இதுக்கு எதுக்கு நான் கோபப்படப் போறேன்?"

அவன் புன்னகைக்க, அவள் நிம்மதிப் பெருமூச்சுடன் அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.

"எனக்கு நாளைல இருந்து காலேஜ் ஸ்டார்ட் ஆகுது விஷ்வா... ஆமா, நான் காலேஜ் போயிட்டா நீ என்ன பண்ணுவ?"

"என்ன பண்ணுவேன்? ம்... நல்லா ஊர்சுத்துவேன்... லண்டன்ல நிறைய நைட் க்ளப் இருக்காமே.. சரக்கும் சைட்டும் தான் இனி!"

அவன் கையில் ஓங்கிக் குத்தினாள் அவள்.
"புத்திய பாரு! விஷ்வா.. ஒழுங்கா நான் க்ளாஸ் போயிட்டு வர்ற வரைக்கும் வீட்டில சமர்த்தா இருக்கணும். எங்கயாச்சும் அந்த மாதிரி எடத்துக்குப் போனன்னு தெரிஞ்சது..."

"ஏ... சும்மா சொன்னேன். சரி, காலேஜ்க்கு தேவையானது எல்லாம் வாங்கிட்டயா?"

மெய்மறந்து நின்றேனேOnde as histórias ganham vida. Descobre agora