🌫️ கானல் நீர் 💝

47 21 45
                                    

மரணத்தை தழுவ ஒரு நொடியேனும் போதும்
ஆனால் மரணத்தையும் தாண்டி வாழ
ஒரு வாழ்க்கையை வாழ்ந்து ஆகா வேண்டும்
சிலிர்ப்பு ஒன்றை உணர உணர்ச்சிகள் வேண்டும்
மற்றவை நம்மை கண்டு சிலிர்க்க தன்னம்பிக்கை வேண்டும்....

கார் இருளை போக்கிட ஒரு துளி நெருப்பு போதும்
அது போலவே ஒருவரை வீழ்த்திட ஒற்றை வார்த்தை போதும்
மனைவியிடம் அன்பை காட்டிட ஒரு நிமிடம் போதும்
அதை காட்ட தான் கணவன் பலமணி நேரம் சிந்திக்கிறான்....

மழலையின் சிரிப்பினால் ஆயிரம் கடவுளை காணலாம்
ஆனால் மழலையின் உதட்டில் ஏற்படுத்த தவறுகின்றோம்
வாழ்க்கையை மாற்றிட ஒரு சூழ்நிலை போதும்
ஆனால் சூழ்நிலை சமாளிக்கவே பல காலங்கள் ஆகிறது....

உழைப்பவனிடம் பல சிறந்த யோசனைகள் உண்டு
ஆனால் நாம் கேட்பதோ பட்டம் பெற்றவரிடம்
அன்பை கொடுப்பவரிடம் கடமை இருப்பதில்லை
கடமை செய்பவருக்கு அன்பை வெளிப்படுத்த தெரிவதில்லை...

சிந்தனை சிந்திப்பதோ அன்பை பெறுவதற்கு
ஆனால் சிந்திக்க வைப்பதென்னவோ பொருளாதாரத்தை
என்ன தான் வாழ்க்கை கடந்து சென்றாலும்
நம் மக்கள் ஓடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்....

முடிவில்லாத ஒன்று உள்ளது என்றால்
அது அன்பு என்ற ஒன்று மட்டுமே...

அன்பை கொடுப்பது இயல்பான ஒன்று
ஆனால் அன்பை பெறுவதோ கடினம்...

முடிவில்லாத வாழ்க்கையை முடித்துவிடாமல்
அதன் போக்கிலே வாழ்ந்து செல்வோமே....

என் உணர்வுகளின் நிழல் (*.*)Where stories live. Discover now