முள்ளும் மலரும் 10

6.9K 236 54
                                    

ராமின் கேள்வியால் மனமுடைந்தவள் " அவன் பண்ண தப்புக்கு அவுங்கள அவமானப் படுத்த சொல்றியாடா.. நம்ப அம்மா அப்பா நம்பள அப்படி வளர்த்துலயேடா.. " என்றாள்

" ஆனா அவங்க அந்த கிருஷ மாமானு சொன்னாங்களே.  அப்போ ஏன் அமைதியா இருந்த " என்று கேட்கவும்,
"அது அவங்களோட ஆசை.. ஆனா என் மனசில அப்படியொரு எண்ணம் இல்லவே இல்ல.. அது உனக்கும் தெரியும்.. ஆனா நீ என்ன சந்தேகமா பார்க்குறது ரொம்ப கஷ்டமா இருக்குடா " என்றாள் தேநீர் வைத்தபடி,

" அப்படிலாம் இல்லக்கா.. என் அக்கா எப்பவும் தப்பு பண்ண மாட்டா " என்று அவன்கூறும் போதே கீதா வந்துவிட, இருவரும் அமைதியாகினர்.

  சிறிது நேரத்திற்கு பிறகு, " மீரா இங்க நாங்க வந்ததே உன்னைப் பார்த்துட்டு வர கிருஷ்ண ஜெயந்திக்கு கூப்பிடலாமனு தான் .. மறக்காம தம்பி தங்கையோட வந்திடுமா " என்றார்..

" ஆன்டி நாங்க வரமுடியாது " என்று மீரா சொன்னதும் முகம்வாடிப்  போனது கீதாவிற்கு..
" என்னம்மா கண்டிப்பா நீ வந்துதான் ஆகனும்.. அவனுக்காக பார்க்காத.. அங்க உனக்காக ஒரு குடும்பம் எப்போதும் இருக்கும்.. உன் தம்பி தங்கைக்கும் சொந்த பந்தங்களோட அரவணைப்பு கிடைச்ச மாறி இருக்கும்.. நீ வந்த அந்த மூணு வருசமும் எவ்ளோ சந்தோசமா இருந்துச்சு தெரியுமா.. என் அப்பாவும் உன் பாட்டுக்காக எவ்ளோ ஏங்கறாரு தெரியுமா.. வாடா அந்த வயசானவங்களுக்காவாது.. " என்றார் ராஜன் கவலையோடு..

அவளுக்குமே அவர்களை பார்க்க வேண்டும் என்று ஆசைதான்.. ஆனால் அவளது தன்மானம் அவளைத் தடுத்தது.. " ஆன்டி அங்க டான்ஸ்லா ஆடுவாங்க தான.. குட்டிப் பசங்களா நிறையா இருப்பாங்க தான " என்று ஆவலாக கேட்டுக் கொண்டிருந்த நிலாவினைப் பார்த்தவள் அவர் கூறியது போல ஒரு மாற்றம் தேவை என்பதை உணர்ந்து சரி என்றாள்.

" ரொம்ப சந்தோசம்மா.. இதுல டிரெஸ் இருக்கு.. நீங்க மூனு பேரும் வரப்ப இதத்தான் போட்டு வரணும்.. அதான் எங்களுக்கு சந்தோசத்த கொடுக்கும் " என்று பைகளை மேசையின்மீது எடுத்து வைத்தார் கீதா.. எங்கே அவள் கைகளில் கொடுத்தாள் வாங்க மறுத்துவிடுவாளோ என்று..

முள்ளும் மலரும் (முடிவுற்றது)Where stories live. Discover now