நிரலி-1

2.7K 89 151
                                    

வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் முதல் வாரிசு கண்டிப்பாக ஆண் பிள்ளையாய் தான் இருக்கும் என்கிற ஆர்வத்தோடும் எதிர்பார்போடும் இருந்த நேரத்தில் எது செய்தாலும் உங்களுக்கு எதிர்மறையாய் தான் செய்வேன் என்ற நோக்கோடு கர்பத்திலே அனைவர்க்கும் போக்கு காட்டி பெண்ணாய் இவ்வுலகுக்கு பிறந்த பெண்ணிவள்... பெண் பிள்ளை என்றால் முகம் சுளிக்கும் காலத்தில் பிறந்ததால் தானும் பெண் தான் என்பதை மறந்து அந்த வீட்டின் பாட்டி கூட அவளை தொட்டு தூக்கவில்லை..

பிள்ளை பெற்றுடுத்த களைப்பில் தாயவள் மயக்க நிலையில் இருக்க செவிலியர் வந்து பெண் பிள்ளை பிறந்திருக்கு என கூற... பொட்ட புள்ள தானா போய் அவ பக்கத்திலே போடு வீட்டு வம்சத்தை தழைக்க வைக்க சிங்கக்குட்டி பெத்து போடுவானு பார்த்தா இப்படி சொத்தை அழிக்க பொட்ட புள்ளைய பெத்து போட்டு இருக்கா என .. பெண்பிள்ளை பெற்றெடுத்த ஆண் சிங்கத்தின் தாயார் கூற.... யாரும் என் பிள்ளைய தூக்க வேண்டாம் என் கையில் கொடுங்க என வந்து நின்றார் இனி வளர்ந்து அனைவரையும் ஆட்டி வைக்க போகும் பெண் சிங்கத்தை பெற்றெடுத்த ராஜா....

எனக்கு இன்னும் எத்துணை பிள்ளை பெண் பிள்ளை பிறந்தாலும் இதே கர்வத்தோடு நான் சுமப்பேன் என் வாரிசு என்று...பெண் பிள்ளை பிடிக்காத யாராக இருந்தாலும் என் பிள்ளையை ஒருநாளும் தூக்கி கொண்டு பாராட்டி சிரட்ட வேண்டாம்... வளர்ந்து என்னை கண்டிப்பாக தலைநிமிர வைக்க போகும் பெண் பிள்ளையே எனக்கு போதும் என கர்ஜித்தவர் யாரும் இங்கு நிற்க தேவை இல்லை உங்களையும் சேர்த்து தான் என தன் தாயாரை பார்த்து கூற அனைவரும் ஏதும் கூற முடியாமல் அப்படியே நின்றனர்...

தன் பிள்ளை தூக்கி உச்சி முகர்த்தவர்..குழந்தையை செவிலியரிடம் கொடுத்து விட்டு .. தன் மனைவியை பார்க்க சென்றார் அங்கு மயக்கம் தெளிந்து படுத்திருந்த சித்ரா கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து கொண்டிருந்தது.. அதை கண்ட ராஜாவின் மனம் கனத்து போனது.. என்ன டா ஏன் இப்படி கண்ணீர் விட்டுகிட்டு இருக்க என அவள் அருகில் மண்டியிட்டு தன் கரம் கொண்டு அவளது கண்ணீரை துடைக்க...

நிரலி (நிறைவுற்றது)... Место, где живут истории. Откройте их для себя