இவள் அறைக்கு செல்வதற்குள்ளே அவன் குடி போதையிலும் நன்றாக சாப்பிடத்திலும் உறங்கி போனான் ... ஆனால் நிரலிக்கோ அந்த மது வாடையும் ஒப்பவில்லை மனமும் கேட்கவில்லை ஆனால் வேறு வழியும் இல்லை... அவன் கட்டிலில் படுத்திருந்ததால் அங்கு படுக்க விருப்பமிலத்தவள் படுக்க விரிப்பு கூட எடுக்காமல் வெறும் தரையில் படுத்துக்கொண்டாள்.. எங்கு தான் அருகில் சென்று அவன் எழுந்துவிட்டால் என்ன செய்வதென்று வெறும் தரையில் இருக்க நடுக்கத்தில் உறக்கம் வராமல் ஏதேதோ நினைத்து கொண்டே கண்ணீரோடு உறங்கியும் போனால்..
இதே போல் தினமும் அவன் உறங்கிய பின்னே அறைக்குள் வருவாள் ஐந்து நாள் இது தொடர ஆறாம் நாள் அவனோ உறங்காமல் அவள் வரும்வரை விழித்திருந்தான்... அறைக்குள் சென்றவளுக்கோ கை கால்கள் வலுவிழந்து நிற்கவும் முடியாமல் வெளியில் செல்லவும் முடியாமல் கண்ணீர் முட்டி கொண்டு வர கதவருகே நின்று கொண்டிருக்க....
அவளை நிமிர்ந்து பார்த்தவன் என்ன விடியுற வரை அங்க தான் நிற்க போறியா இங்க வா என கூப்பிட அவளோ தயங்கி தயங்கி அவனை பார்க்க....
ஒருதடவை சொன்னால் உடனே வரணும் திரும்ப திரும்ப பேச வைக்க கூடாதென சொன்னவன் சொன்ன வேகத்தில் அவள் அருகில் சென்று அவளை இழுத்து கட்டிலில் தள்ளினான்....
நிரலி பதறியடித்து கட்டிலில் இருந்து எழுந்து சுவற்றில் ஒன்றி நிற்க.. ஹே என்னை ரொம்ப கோபப்படுத்தாத இப்போ என்ன டி புருஷன் தானே நான் எதுக்கு இப்படி பண்ற என கூறி அவளை நெருங்க அவளுக்கு மது வாடை ஒப்பாமல்...
அ.. அது.. எனக்கு இந்த ஸ்மெல் குமட்டுது முடியலை ப்ளீஸ் மாமா கொஞ்சம் தள்ளி போங்க என்றிட அவ்ளோதான் தான் தாலி கட்டிய மனைவி தன்னை நிராகரிக்கிறாள் என்பது புரிய வேலனுக்கு கோபம் தலைக்கு ஏறியது ...
இனி குடிக்காதீங்க எங்க அப்பா குடிக்கவே மாட்டாங்க என நிரலி கூறிட.. அப்போ உங்க அப்பனையே கல்யாணம் செய்துகிட்டு குடும்பம் நடத்த வேண்டியது தானே எதுக்கு டி என்னைய கட்டிகிட்ட என விஷமிக்க வார்த்தை கொடுக்கென கொட்ட...
YOU ARE READING
நிரலி (நிறைவுற்றது)...
Short Storyஇது முழுதும் ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டம் மட்டுமே... பெண்ணவளின் வாழ்க்கை எப்படி தொடங்கி எங்கோ சென்று எதிலே முடிகிறது.... சொல்லற அளவுக்கு பெருசா எழுதுவேணான்னு தெரில அதுனால கதையோடு பயணிக்கலாம்....