நிரலி :
பெயருக்கு இவரை போல் வேறொருவர் இல்லை என்பது பொருள், அதாவது இந்த பெயர் கொண்ட குழந்தையை போல வேறு யாரும் இல்லை; இந்தக் குழந்தைக்கு நிகர் அக்குழந்தையே! வேறு யாரும் இலர் என்று பொருள்;அதனால் தான் கதைக்கும் இப்பெயரே வைக்கப்பட்டது....
வேலன் :
இதுபோல கேரக்டர் கொண்டு எத்துணையோ பேர் இங்க இருக்கலாம்... அதாவது வேலன் கதாபாத்திரம் முழுதும் நான் சித்திகரித்தது இல்லை அதற்காக முழுமையும் உண்மை இல்லை 70% உண்மையான கேரக்டர்...
கதைக்கு இரண்டாவது ஒரு ஹீரோ போட்டு நிரலிக்கு நல்ல வாழ்க்கை கொடுக்கணும் ஒரு ஹீரோ தான் அவ வாழ்க்கை மாத்தணும்னு சிலர் சொல்லிருந்தீங்க ஆனால் என்னோட விருப்பம் ஒரு பெண் தனியா இருந்து கூட சாதிக்க முடியும் என்பதால் தான் அவள் வாழ்க்கை போக்கு அப்படியே அதாவது உண்மை ஒரு பொண்ணு அடுத்து என்ன முடிவு எடுப்பாலோ அப்படியே எழுதி முடுச்சேன்..
அதே போல வேலனுக்கு தண்டனை கிடைக்கணும் அதுக்கு ஒரு வலி கொடுத்து அவன் கஷ்டப்படணும்னு எழுத சொன்னிங்க அதையும் நான் செய்யல..
அதற்கும் ஒரு காரணம் உண்டு இங்கு நாம வெறும் வாய் வார்த்தைக்கு. மட்டும் தான் சொல்லலாம் தப்பு செய்தவன் தண்டனை அனுபவம் விப்பாங்க அப்படினு சொல்லலாம்.. ஆனால் இந்த உலகத்துல தப்பு செய்றவன் நல்ல தான் இருக்கான்.. எதுவும் செய்யாதவங்க கூனி குறுகி கஷ்டப்படுறாங்க... அதுனால வேலன் குடும்பமாக இருப்பதை அப்படியே எழுதினேன் நடக்கும் உண்மை தானே...
அதுவும் ஒரு பெண்ணின் வாழ்க்கை மறுமணம் என்பது அவ்வளவு எளிதல்ல.. சில பெற்றோர்களே கூட தன் மகளுக்கு மறுமணம் செய்து வைக்க தயங்கும் உலகம் தன் இது...
நிரலி பற்றி உங்கள் கருத்து???
நிரலியின் முடிவு சரியா??
நிரலி கடைசி வரை தனியாக வாழ முடியும்னு நெனைக்குறிங்களா???
கதையின் முடிவு எழுதியது சரியானதா???
கதை பற்றி நீங்க நெனைக்குறது என்ன???
பெண்கள் எப்படி வாழணும்னு நீங்க உங்க மனசுல நினைக்குறது??
கதை நிச்சயம் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி எழுதியது அதாவது கண்டிப்பா ஒரு 60% உண்மை மட்டுமே...
கருத்துகள் வரவேற்கப்படுகிறது அடுத்து ஒரு கதைக்களம் பெண்களை கொண்டு எழுதுறதுனு இருக்கேன் உங்கள் கருத்துகள் பொறுத்து தான் எழுதுவேன்....
YOU ARE READING
நிரலி (நிறைவுற்றது)...
Short Storyஇது முழுதும் ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டம் மட்டுமே... பெண்ணவளின் வாழ்க்கை எப்படி தொடங்கி எங்கோ சென்று எதிலே முடிகிறது.... சொல்லற அளவுக்கு பெருசா எழுதுவேணான்னு தெரில அதுனால கதையோடு பயணிக்கலாம்....