நிரலி-8

847 56 36
                                    

ஆமாம் இனி என் வாழ்க்கையில் என்ன தண்டனை பெரிதாய் கிடைக்கப்போகிறது.. உள்ளுக்குள் அழுது புலம்பி கரைந்தவர் விடியலில் எழுந்து தன் வேலைகளை முடித்து கொண்டு முதல் வேலையாய் தன் மகளுக்கு அழைப்பு விடுத்தார்..

நான்கு முறை அழைத்தும் ஏற்கவில்லை கவலையாக இருந்தாலும் தனக்கான தண்டனை அல்லவா ஏற்றுக்கொண்டு தானே ஆக வேண்டும்...

எப்பா ராசு இங்க செத்த வாப்பா.. என்னமா சொல்லு.. கால்லெல்லாம் ஒரே வழியா இருக்கு ஆஸ்பத்திரிக்கு போய்ட்டு வந்த தேவலை.. சரிம்மா சாப்பிட்டு கெளம்பி இரு கூப்பிட்டு போறேன்...

அப்படியே உங்கிட்ட இன்னொன்னு சொல்லணும் ராசு.. சொல்லுமா.. அது ஒன்னுமில்ல ராசு.. ஒன்னுமில்லன்னா விடுமா எதுக்கு அப்பறம் சும்மா கூப்பிட்டுக்கிட்டு இருக்க.... எப்பா ராசு நில்லு எதுக்கு இப்படி ஓடுறவ..

அட சொல்லும்மா எனக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கு..  அது அந்த சிரிக்கிய ஒரு எட்டு டவுன் ஆஸ்பத்திரில கூட்டி கொண்ட காமிச்சுட்டு வந்தா தேவலை... யாரமா சொல்ற.. புரியற மாதிரி பேசமாட்டியா நீ . 

அதான்யா அந்த ராங்கிக்காரி உன் மூத்த மவ அவளதான்... என் மகளுக்கு என்ன செய்யுது உடம்பு சரி இல்லையா அப்படி ஒன்னும் சித்ரா கூட என்கிட்ட சொல்லையே.. இளா சொன்னாளா அவளும் என்கிட்ட ஒன்னும் சொல்லல.. சித்ரா சித்ரா... எதுக்கு இப்போ இவளோ சத்தம் இங்க தான் இருக்கேன் சொல்லுங்க....

நிரலிக்கு உடம்பு சரியில்லையா அம்மா சொல்லுது என்ன ஆச்சு என் பொண்ணுக்கு.. இருங்க இருங்க அவ நல்லா தான் இருக்கா. உங்க அம்மா ஏதாவது கனவு கண்டுருப்பாங்க என அந்த கிழவியை முறைத்து கொண்டே கூற..

ஹ்ம்ம்க்கும் நெத்தரை கண்டா நான் இப்போ சொல்றேன்.. ஊர் உலகமே பேசிக்குது உனக்கு தெரியாத என்ன ...  என்னமா பேசுற நீ என் புள்ளைக்கு உடம்பு சரி இல்லைனு வீட்ல யாருக்கும் தெர்ல ஊரு உலகம் பேசிக்குதா.. பைத்தியம் ஏதும் புடுச்சுருக்கா உனக்கு..

டேய் ராசு நிப்பாட்டுடா சும்மா என்னையே குத்தம் சொல்லாம.. எனக்கு கல்யாணம் முடுஞ்சு அடுத்து பத்து மாசத்துல நீ பொறந்த.. உனக்கு கல்யாணம் பண்ணி வச்சேன் அடுத்த பத்து மாசத்துல இதோ இவ வயித்துல அந்த திமிரு புடுச்சவ பொறந்தா.. ஆனால் பாரு அவளுக்கு கல்யாணம் முடுஞ்சு மூணு வருஷம் ஆகப்போகுது அவ வயித்துல ஒரு புழு பூச்சி கூட முளைக்களை பாக்குற எல்லாரும் கேட்குறாங்க உன் பேதிக்கு என்ன கொறைனு அதான் சொல்றேன் அவளை ஆஸ்பத்திரில கொண்ட காமிச்சுட்டு வான்னு...

நிரலி (நிறைவுற்றது)... Where stories live. Discover now