நிரலி -2

1.4K 85 563
                                    

நிரலி பிறந்த மூன்று  வருடத்தில் அவள் செய்யும் சேட்டையில் வீட்டில் பிடிக்காதவர்களும் அவளின் சிறு சிறு குறும்புகளை ரசித்தபடியே இருந்தனர்...

சித்ரா மீண்டும் கருவுற்றிருக்க இம்முறை ஆண்பிள்ளை பிறக்கும் என்று குடும்பத்தாரோடு சேர்ந்து சித்ராவும் ஆசைப்பட.. ராஜா எந்த பிள்ளை என்றாலும் என் பிள்ளை தான் என்று எந்த கவலையுமின்றி நிரலி மேல் உயிரே வைத்து அந்த ஊரையே வலம் வந்து கொண்டிருந்தார்...

பிரசவவலி எடுக்க மீண்டும் பெண் பிள்ளை பிறக்க... வீட்டினர் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகிப்போன சித்ரா தன்னையே வெறுத்து கொண்டு அந்த பச்சிளம் பிள்ளையை தூக்க கூட இல்லாமல் ஏன் அதன் பிஞ்சு முகத்தை கூட பார்க்காமல் வீம்பு பண்ண...

ராஜா தன் மனைவியிடம் சித்ரா இதல்லாம் ரொம்ப தப்பு எந்த பிள்ளை என்றாலும் நம்ம உயிர் கொண்டு உருவாகியது அதனின் முகத்தை கூட பார்க்காமல் இப்படி உக்காந்துருக்க.. பிள்ளை அழுகுது பாரு முதல பசி ஆத்து என கூற சித்ரா தேம்பி தேம்பி அழ...

அப்பா ஏன் அம்மா அழறாங்க என தத்தி தத்தி தன் மழலை மொழியால் நிரலி கேட்க.. அது ஒன்னும் இல்லாம உங்க அம்மாக்கு பைத்தியம் புடுச்சுருக்கு அவளை விடு உனக்கு குட்டி பாப்பா புடுச்சுருக்க என தன் மகளை மடியில் அமர்த்தி கொண்டு கேட்க....

எனக்கு ரொம்ப புடுச்சுருக்குப்பா ஆனால் பாப்பா ஏன் என்ன மாதிரி அமைதியா இல்லாம அழுதுகிட்டே இருக்கு என கேட்க.. அது ஒண்ணுமில்லைடா பாப்பாக்கு பசிக்குது நீங்க போய் வெளில பாட்டியோட இருங்க நான் அம்மா கூட பேசிட்டு வரேன் என கூற தன் தங்கையின் பிஞ்சு விரல்களை ஒருமுறை தொட்டுவிட்டு ஓடி மறைந்தாள் நிரலி...

சித்து முதல பாப்பாவ பாரு அழகுற அப்பறம் எதுவாக இருந்தாலும் பேசலாம் என கூற... என்னங்க எனக்கு பயமா இருக்கு நமக்கு ஆம்பிளைப்பில்லை இல்லைனு என சொன்னதையே திரும்ப திரும்ப கூறிக்கொண்டிருக்க முதல பிள்ளைய பாரு என கடுமையாக பேச.. சித்ரா மனமே இல்லாமல் கணவனுக்கு கட்டுப்பட்டு குழந்தையை கவனித்தால்....

நிரலி (நிறைவுற்றது)... Where stories live. Discover now