மேள தாளத்துடன் அரங்கேறுது ஒரு இசை... இயற்கையின் இன்னிசை
சுற்றி இருள் சூழ மனதிலோ ஒளி வெள்ளம்... கண்ணில் பிரதிபலிக்கும் உயிரை கீறி போகும் ஜுவாலை
சின்ன சின்ன தூரிகை கொண்டு மண்ணிற்கும் விண்ணிற்குமான அழகிய சங்கமத்தை தீட்டும் முகில்
மனதின் இசையும் இயற்கையின் இசையும் ஒரே தாளத்தில் ஒலிக்க சுருதி கூடுது ஒவ்வொரு மெட்டுக்கும்
வெளியில் ஓசை இதயத்திலோ ஏகாந்தம், இந்த இதமும் கண் கொட்டாமல் புன்னகை தவழ நிலைத்திடாதோ....