மேகங்கள் சூழ்ந்து இருட்டிய நேரம்... மழை வரும் அறிகுறிகள் மயிலுக்கு தானே தெரியும் ஆனால் இந்த நாவிற்கும் தான் யார் செய்தி சொன்னதோ!
எங்கும் குளிர் பரவ கதகதப்பான இடம் தேடி தேகமும் சூடான சுவை தேடி நாவும் அலைப்பாய...
கடாயில் கடலைமாவுடன் வெங்காயமும் இணை பிரியாது குளிருக்கு இதமாக சுடும் எண்ணையில் கொப்பளித்து நீராட...
நாவிலோ விடாது அடைமழை 😋😋