பாகம் 7

79 11 7
                                    

🌈 என் தூரிகா நீயடா 🌈

Part 7..

இரண்டு நொடி...இதுதான் நடந்து கொண்டிருக்கிறதா என அவர் மனம் சந்தேகம் கொண்டு, பின் நடப்பது நிஜம் தான் என்ற உணர்வு அவருக்கு தெரியப்படுத்த.. அவரின் புத்தி அதை எப்படி கையாளுவது என அவருக்கு சொல்லித் தரவில்லை...

தன் மார்பில் முகம் புதைத்து அழும் அவளிடம்...

முல்ல...Relax.. என்றார்..,.

தேம்பினால்...

உங்கள எங்கேயும் விடமாட்டேன். எனக்கு பயமா இருக்கு கதிர் என்ற... அவளின் விம்மல் அவரை ஏதோ செய்தது.

என் கூடவே இருங்க ங்க ... என பேசும்போதெல்லாம் மேலும் அவளின் பிடி அவரை இருக்கியது.

அவளாகத்தான் அழுகையை நிறுத்த வேண்டும் என்ற புரிதலுக்கு அவர் வந்ததினால்.. கதிர் ஏதும் பேசவில்லை அமைதியானார்.

நானும் எவ்வளவோ கண்ட்ரோல் பண்ணேன் என்னால முடியல. நீங்க போயிட்டா என்னால நினைச்சு கூட பாக்க முடியல கதிர்.. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல கண்ணீருடன் சேர்த்து அவள் காதலையும் அவர் பிரிதல் அவளுக்கு ஏற்படுத்தி இருக்கும், மேலும் ஏற்படுத்த போகவிருக்கும் துக்கத்தையும் அவருக்கு புரிய வைத்துக் கொண்டிருந்தால் முல்லை.

அதுவரையில் தொடுதலில் இருந்த வரைமுறை எல்லாம் உடைக்கப்பட்டு காற்றும் நுழைய முடியாத படி அவளின் அனைப்பு வார்த்தைகளை தாண்டி அவருக்கு ஏதோ தெரியப்படுத்த.. கதிரின் கைகளும் அவளைப் படர்ந்து இருந்தது.

கடுங்க குளிர்காலம் சர் என்று விலகி இடமளிக்கும் நிறமளிக்கும் இளவேனில் காலமாக மாறியதைப் போல், அவர் கைகளில் அரவணைப்பு தந்த ஆறுதலில் இளைப்பாற அவளின் அழுகையும் சற்று நேரம் நின்று, பின் அமைதியை தொட்டது.

இயல்பு நிலை திரும்பிய நிலையில்.. அவரிடம் இருந்து சட்டென்று விலகிக் கொண்டாள். அவர் கண்கள் அவளை கூர்மையாக பார்ப்பதை உணர்ந்த அவள்.. தன்னை சரி படுத்திக் கொள்ளுவதை போல கண்களை துடைத்துக் கொண்டு.. பின் அவர் முன் தலையை குனிந்து கொண்டிருந்தாள்.

🌈என் தூரிகா நீயடா 🌈Where stories live. Discover now