பாகம் 9

95 11 7
                                    

🌈என் தூரிகா நீயடா 🌈

part 9...

முல்லை தன்னை விட்டு தூரம் சென்றிருப்பால் என அவர் நினைக்கத் துவங்க.. தான் தூங்கியதும் வெளியில் வந்து இதை படித்திருக்கிறாள் படித்ததும் தானாக ஒரு முடிவுக்கு வந்து சென்று விட்டாள் எனப் புரிந்தது கதிருக்கு.

காலைல எந்திரிச்சு கேட்டிருந்தா அந்த குழப்பம் தீர்ந்து, இல்ல நீயும் நானும் சரியான ஜோடி தான் சொல்லி இருப்பேனடி.. எங்கடி போன பைத்தியக்காரி என அவர் மனம் உளறா தொடங்கியது.

உன்னை எங்கேயும் போயிர விடமாட்டேன் என தேட ஓட..

சட்டென்று கிளம்பிய கதிரிடம் குறுக்கிட்டார் அவர் அப்பா...

எங்கடா போற?

அவள தேட... என்றார்

எங்கன்னு போய் தேடுவ...

தெரியல... என்றார்

நான்தான் அவ வீட்டுக்கு போயிருப்பானு சொல்லுறேன்ல. அமைதியா இரு என்றார்.

அப்பா... என்றும் அடுத்து பேச்சு வராமலும் தவித்தார் கதிர்

மீண்டும் அவரே, சரி நான் போய் அவ வீட்ல பாத்துட்டு வரேன்.... என்றதும்

பைத்தியம் பிடிச்சு போச்சா கதிர் உனக்கு. பொண்ண கூட்டிட்டு வந்துட்டு இப்போ காணோம்னு போய் நின்னா, உன்னை என்ன சொல்லுவாங்க சொல்லு...

நீங்க தான பா அவ அங்க இருப்பானு நம்பிக்கையா சொல்றீங்க. போய் பார்த்தா தானே தெரியும்.

கதிர்... issue is getting bigger. அவ அங்க இல்லனா உன்ன சும்மா விடுவாங்கன்னு நினைக்கிறியா?? என் பொண்ணு ஏதோ பண்ணிட்டேன்னு அவங்க வீட்ல இருந்து கம்ப்ளைன்ட் கொடுத்துட்டா என்னடா பண்றது.. இந்த பொண்ணு இப்படியா பண்ணும் .உன்ன தான் மாட்டி விட்டுட்டு போயிருக்கு இப்போ...

அப்பா... அதையெல்லாம் பத்தி யோசிக்கிற நிலையில நான் இல்ல ..அவள பாக்கணும் அவ்வளவுதான் அது மட்டும் தான் என் மனசுல இப்ப ஓடிட்டு இருக்கு...

டேய்... புரியாம பண்ற... அவ வேற ஏதும் எழுதி வச்சிருக்காலான்னு பார்ப்போம் வா... எனக்கு சுத்தமா என்ன பண்றதுன்னு தெரியல என்றார்

🌈என் தூரிகா நீயடா 🌈Where stories live. Discover now