அலை 🌊 19

417 7 7
                                    

ஹாய் பிரெண்ட்ஸ்....

உங்ககிட்ட வாரம் ஒரு காரணத்தை சொல்றது எனக்கே கஷ்டமா தான் இருக்கு... பட் வேற வழி இல்லை..
சொல்லி ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கேன்... என் மகனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது... ஆறு வயசு தான் ஆகுது அவனுக்கு... அவன் வலியில் இருக்கும் போது என்னால் எழுத முடியாது... என் சூழ்நிலை புரியும் னு நினைக்கிறேன்... இதுல இரண்டு எபி இருக்கு முடிஞ்சா கமெண்ட் பண்ணுங்க...

மிக்க நன்றி....

அலை 19

.....

பார்வை கையில் இருந்த ஃபைலில் இருந்தாலும் யோசனையுடனே அமர்ந்திருந்தார் தேவராஜ்.

அவருக்கு காபியை எடுத்து வந்த கல்யாணி கணவரின் செய்கையை ஆராய்ச்சியாக பார்த்தவர் "என்னங்க... என்ன ஆச்சு...? ஏன் இப்படி ஃபைலை திறந்து வைச்சிக்கிட்டு வேற எதையோ யோசனைப் பண்ணிட்டு இருக்கிங்க...? குழப்பமாக வினவினார்.

"அது ஒன்னுமில்லை மா வேற ஏதோ ஒரு சிந்தனையில் இருந்துட்டேன்... பச்... சரி அதை விடு... உன் மகன் ஃபோன் பண்ணானா... எப்போ வரானாம்??"

"கேட்டா ஒன்னுமில்லன்னு சொல்றிங்க... ஆனா முகத்தை பார்த்தா அப்படி தெரியலையே... குழப்பமா இருக்கிங்கன்னு தெரியுது... ஏதோ மறைக்கிறிங்கன்னும் புரியது... என்னன்னு சொல்லுங்க... அதுவும் இல்லாம புதுசா என்ன என் மகன்னு சொல்றிங்க... அப்போ ஏதோ இருக்கு என்னன்னு சொல்லுங்க... கார்த்திக் என்ன பண்ணான்... சொல்லுங்க..." அவர் காரணத்தை வற்புறுத்தி கேட்க,

"அவன் ஒன்னுமே பண்ணல கல்யாணி.... அதுதான் எனக்கு உறுத்தறது... நாம அவனை கல்யாணம் பண்ணிக்க சொல்லி தப்பு பண்ணிட்டமோ!!" மனைவியிடம் தன் சந்தேகத்தை தெரிவித்தார் தேவராஜ்.

கணவரின் வார்த்தைகள் பீதியை கிளப்ப, "உங்களுக்கு ஏன் திடீர்னு இப்படி ஒரு எண்ணம்..."

"கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு திடீர்னு சரின்னு சொன்னான்... நிச்சயம் முடிஞ்ச மறுநாளே அர்ஜூன் கூட மும்பை கிளம்பி போயிட்டான்... அப்புறம் இதை எப்படி எடுத்துக்குறது கல்யாணி எனக்கு என்னமோ தப்பா படுது..."

அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!...Where stories live. Discover now