8 பிடித்தவனுக்காக
அது ஒரு வார இறுதி...
"ஹாய் நந்து..." என்றாள் அங்கு வந்த குஷி.
"ஹாய்..." என்றான் அவன் சுரத்தே இல்லாமல்.
"என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு டல்லா இருக்க?"
"அம்மா இன்னைக்கு சிக்கன் செய்றேன்னு எனக்கு ப்ராமிஸ் பண்ணி இருந்தாங்க. ஆனா செய்யல" என்றான் சோகமாய்.
"ஏன் ஆன்ட்டி?"
"நாங்க நாட்டுக்கோழி, அதாவது வீட்ல வளர்க்கிற கோழி மட்டும் தான் சமைப்போம். தெரிஞ்சவர் ஒருத்தர் கிட்ட அதை கொண்டு வரச் சொல்லி இருந்தேன். ஆனா அவங்களால அதை இன்னைக்கு கொண்டு வர முடியல..."
"அல்லவ்வுக்கு கூட சிக்கன் ரொம்ப பிடிக்கும் இல்ல?"
"ஆமாம். ஆனா, அவன் தன்னோட ஹெல்த்தில் ரொம்ப கான்ஷியஸா இருப்பான். அதனால அவனும் நாட்டுக்கோழி மட்டும் தான் சாப்பிடுவான். எங்க ஏரியாவுல அது கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். அதனால அங்கிள் அவருக்கு தெரிஞ்சவர் கிட்ட சொல்லி வச்சு, கொண்டு வர சொல்லுவாரு"
அவளுக்கு சட்டென்று ஏதோ ஒரு யோசனை உதிக்க, அங்கிருந்து சென்று தனது தோழி அர்ச்சனாவுக்கு ஃபோன் செய்தாள். அவள் சென்னை புறநகரில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசிப்பது அவளுக்கு தெரியும்
"அச்சு, நான் குஷி பேசுறேன்"
"ஹாய், உனக்கு என்ன திடீர்னு என்ன ஞாபகம் வந்திருக்கு?"
"எனக்கு உன்னோட ஹெல்ப் வேணும்"
"என்ன வேணும்னாலும் கேட்கலாம்"
"எனக்கு வீட்ல வளர்க்கிற கோழி வேணும். நாளைக்கு சாயங்காலம் நீ காலேஜுக்கு திரும்பி வரும் போது கொண்டு வா..."
"குஷி, எங்க அம்மா பணம் கொடுத்தா தான் கொடுப்பாங்க. அவங்க ஃபிரியா கொடுக்க மாட்டாங்க..." என்றாள் தயக்கத்துடன்.
"பைத்தியம்... நான் உன்கிட்ட ஃப்ரீயாவா கேட்டேன்? எவ்வளவு கொடுக்கணும்னு சொல்லு"
"ஒரு கோழி 400 ரூபா"
"சரி, நான் உனக்கு ஜிபே பண்ணிடுறேன். நீ அதை கொண்டு வரும் போது நான் பஸ் ஸ்டாண்ட்ல வாங்கிக்கிறேன்"
YOU ARE READING
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்!
Romanceகாதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து ஓடிவிடத்தான் முடியுமா? தன் இளம...