25 பிடிவாதம்

339 39 3
                                    

25 பிடிவாதம்

அர்னவ்காக சிற்றுண்டியும் மதிய உணவும் தயார் செய்து கொண்டிருந்தார் ரத்னா. அன்று முகூர்த்த நாள் என்பதால், அவர்கள் திருமணத்திற்காக புடவையும் தாலியும் வாங்குவது என்று முடிவு செய்திருந்தார்கள். அப்பொழுது, தனக்கு பின்னால் யாரோ நிற்பதை உணர்ந்தார் அவர். அவர் பின்னால் திரும்பிப் பார்க்க, அவரைப் பார்த்து புன்னகை புரிந்தான் அங்கு நின்றிருந்த அர்னவ்.

"அரு உனக்கு ஏதாவது வேணுமா?"

"அம்மா, இன்னைக்கு நீங்க தாலியும் புடவையும் வாங்க போறீங்க தானே?"

"ஆமாம், உன் ஒருத்தனை தவிர நாங்க எல்லாரும் போக போறோம். நீயும் எங்க கூட வந்தா நல்லா இருக்கும்னு நாங்க நினைக்கிறோம்"

"இல்லம்மா. எனக்கு ஆஃபீஸ்ல ரொம்ப முக்கியமான வேலை இருக்கு (என்று தன் பாக்கெட்டில் இருந்து ஏடிஎம் கார்டை எடுத்த அவன்) குஷியோட புடவையும் தாலியும் வாங்க இதுலயிருந்து பணம் எடுத்துக்கோங்க" என்றான்.

உள்ளுக்குள் நகைத்துக் கொண்ட அவர்,

"இதுக்கு என்ன அவசியம், அரு? எங்ககிட்ட பணம் இல்லன்னு நினைக்கிறியா?" என்றார் வேண்டுமென்றே.

"இது காசு பத்தின விஷயம் இல்லம்மா. எல்லா செலவும் நீங்க தானே செய்றீங்க...! என்னோட கான்ட்ரிப்யூஷனும் என் கல்யாணத்துல இருக்கட்டுமேன்னு தான்..." என்றான் தயக்கத்துடன்.

"அப்படின்னா ஒன்னு பண்ணு... மளிகை கடைக்கு போயி, அவங்களுக்கு செட்டில் பண்ண வேண்டிய பில்லை கொடுத்துடு. அது இன்னும் உனக்கு திருப்தியை தரும்" என்றார் முகத்தை சீரியஸா வைத்துக் கொண்டு.

வாயடைத்து நின்ற அவன், இதற்கு மேல் அவரிடம் பொய்யுரைக்க முடியாது என்பதை உணர்ந்தான்.

"நீங்க என்ன செலவு வேணாலும் செஞ்சுக்கோங்க. ஆனா..."

"ஆனா?"

"குஷி எனக்கு சொந்தமாகும் போது, அவ நான் வாங்கிக் கொடுத்த புடவையில இருக்கணும்னு நான் விரும்புறேன் மா"

தூக்கம் விற்று காதல் வாங்கினேன்!Unde poveștirile trăiesc. Descoperă acum