9 அவன் மாறி விட்டான்...!

289 32 2
                                    


9 அவன் மாறி விட்டான்...!

சாப்பிட்டு முடித்த பின், குஷிக்கு ஃபோன் செய்து அவளை தங்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்தார் அரவிந்தன். அவர் ஏன் தன்னை அழைக்கிறார் என்று அவளுக்கு தெரியும். அவளது சமையல் திறமையை புகழ்வதற்காக தான் அழைக்கிறார். அவற்றை பெரும் மனநிலையில் அவள் இல்லை. அவள் யாருக்காக அதை விரும்பி சமைத்துக் கொடுத்தாளோ, அவனே அதை தொடாத போது யார் புகழ்ந்து என்ன பயன்? ஆனால் அதே நேரம், அரவிந்தன் அழைத்த பின் அங்கு போகாமல் இருக்கவும் அவளால் முடியாது.

அங்கு சென்ற அவளது முகம், அங்கு அர்னவ் இருந்ததை பார்த்து பொலிவு பெற்றது. தன் மகிழ்ச்சியை கட்டுப்படுத்த திக்குமுக்காடி போனாள் குஷி. அவள் சமைத்த உணவு சேர வேண்டியவன் கைக்கு சென்று சேர்ந்து விட்டதை விட வேறு என்ன வேண்டும்? அவளையே பார்த்து சிரித்தபடி நின்றிருந்த ரத்னாவை பார்த்து,

"என்கிட்ட பொய் சொன்னீங்களா?" என்றாள்.

ஆம் என்று சிரித்தபடி தலையசைத்தார் அவர்.

"நீங்க ரொம்ப டூ மச்"

"நீங்க ரெண்டு பேரும் எதைப் பத்தி பேசுறீங்க?" என்றார் அரவிந்தன்.

"அரு டின்னருக்கு வெளியில போயிருக்கான்னு சொல்லி நான் அவளை வெறுப்பேத்தினேன்"

முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு, ஆம் என்று தலையசைத்தாள் குஷி. அதை அறிந்த அர்னவ்வின் மனம் சந்தோஷத்தில் துள்ளி குதித்தது. குஷியை பார்த்து புன்னகை புரிந்து, அவளுக்கு சந்தோஷம் அளித்தான்.

"நீ ரொம்ப சேட்டை பண்ண ஆரம்பிச்சிட்ட, ரத்னா" என்று சிரித்தார் அரவிந்தன்.

"முக்கியமா என் கிட்ட..." என்றாள் குஷி.

"நீ இவ்வளவு நல்லா சமைப்பேன்னு எங்களுக்கு தெரியாது..." என்றார் அரவிந்தன்.

"குஷி, நீ கலக்கிட்ட... இது வேற லெவல்" என்றான் நந்து.

"ரொம்ப நல்லா இருக்கு" என்றான் அர்னவ்.

குஷியின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அவள் சமைத்த உணவை சாப்பிட்டதோடு மட்டுமல்லாமல், அவளை புகழவும் செய்து விட்டான் அர்னவ். அவளுக்கு வேண்டியதெல்லாம் அது தான். அன்று இரவு, வெகு நேரம் தூங்காமல் பைத்தியக்காரியை போல் சிரித்துக் கொண்டிருந்தாள் அவள்.

தூக்கம் விற்று காதல் வாங்கினேன்!Where stories live. Discover now