22 ஒரு வழியாய்...

288 40 7
                                    

22 ஒரு வழியாய்...

நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்த ரத்னாவை பார்த்தார் அரவிந்தன். அவர் இப்படி நிம்மதியிழந்து தவிக்கும் பொழுது, எப்படி ரத்னாவால் இவ்வளவு நிம்மதியாய் உறங்க முடிகிறது என்று அவருக்கு புரியவில்லை. சைலன்ட் மோடில் இருந்த அவரது கைபேசி ஒளிர்ந்தது. அதில் அவரது நண்பன் ஷஷியின் பெயர் தெரிந்தது. அந்த அழைப்பை ஏற்றார் அவர்.

"நீ இன்னும் தூங்கலையா?"

"உனக்கும் தூக்கம் வரல போலருக்கு... அதனால தானே என்னோட காலை ஃபர்ஸ்ட் ரிங்க்லயே எடுத்துட்ட?"

"நம்ம இக்கட்டான நிலையில இருக்கும் போது, எப்படி தூக்கம் வரும்?"

"நீ எதுக்கும் கவலைப்படாத. அர்னவ் தான் என்னோட மாப்பிள்ளை. அந்த விக்னேஷ் என் மகளை கல்யாணம் பண்ணிக்க நான் விடமாட்டேன். கடைசி நேரத்தில் கூட நான் இந்த கல்யாணத்தை நிறுத்திடுவேன்"

"ம்ம்ம்... கரிமா என்ன செஞ்சுகிட்டு இருக்கா?"

"வேற என்ன செய்வா?  நிம்மதியா தூங்குறா"

அதைக் கேட்டு சிரித்த அரவிந்தன்,

"நமக்கு அவங்களை மாதிரி மனோதிடம் இல்லன்னு நினைக்கிறேன். பாரு, நம்ம ரெண்டு பேரும் தூங்காம புலம்பிக்கிட்டு இருக்கோம்... ஆனா இவங்க ரெண்டு பேரும் எவ்வளவு நிம்மதியா தூங்குறாங்க!"

"உண்மை தான். ஒரு, நேவல் ஆஃபிஸரா, நம்ம ரெண்டு பேரும் கடுமையான, ஆர்ப்பரிக்கிற கடல்களை எல்லாம் கடந்திருக்கோம். ஆனா இந்த சாதாரண சிற்றலை நம்மளை எவ்வளவு ஆட்டம் காண செய்யுது பார்த்தியா?"

"ஏன்னா, இது நம்ம பிள்ளைங்க சம்பந்தப்பட்ட விஷயம். நாளைக்கு அவங்க வராங்க. என்ன நடக்குதுன்னு பார்க்கலாம். எல்லாத்துக்கும் தயாரா இரு"

"நீ என் கூட இரு. நான் எல்லாத்தையும் சமாளிப்பேன்"

"நீயும் கவலைப்படாத. நம்ம பொண்டாட்டிங்க நம்மளை தூக்கி நிறுத்துவாங்க"

சிரித்தபடி அவர்கள் அழைப்பை துண்டித்தார்கள்.

சற்று நேரம் குளிர்ந்த காற்றில் நின்றால், மனதுக்கு இதமாய் இருக்கும் என்று எண்ணி, மாடிக்கு செல்லலாம் என்று அறையை விட்டு வெளியே வந்தார் அரவிந்தன். அப்பொழுது,
அர்னவ்வின் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருப்பதை கண்டு வியப்படைந்தார். அவரது மகனும் கிட்டத்தட்ட அவரது மனநிலையில் தான் இருக்கிறான் போலிருக்கிறது. அவனது அறையின் கதவை தட்டினார்.

தூக்கம் விற்று காதல் வாங்கினேன்!Where stories live. Discover now