24 ஒருவருக்கொருவர்

397 42 2
                                    

24 ஒருவருக்கொருவர்

குஷி தன்னிடம் பேசியதை பற்றி நினைத்துக் கொண்டு கட்டிலில் படுத்திருந்தான் அர்னவ். தங்கள் திருமணத்தை நிறுத்த சொல்லி அவள் எப்படி கேட்கலாம்? அவனை மணந்து கொள்ள அவள் தயாராக இல்லை என்று அனைவரிடமும் கூறி விடுவாளோ? கட்டிலை விட்டு கீழே இறங்கி தரைதளம் வந்தான். அங்கு அரவிந்தனும் ரத்னாவும் ஜோசியரை அழைத்து, பொருத்தம் பார்ப்பது பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

"நம்ம நாளைக்கு போய் ஜோசியரை பாத்துட்டு வரலாமா?" என்றார் அரவிந்தன்.

"இல்ல இல்ல, அவர் இங்க வரணும்னு நான் நினைக்கிறேன். அவர் என்ன சொல்றாருன்னு எல்லாரும் தெரிஞ்சுக்கட்டும்"

"எப்போ அவரை இங்க வர வைக்க போற?"

"நாளைக்கு சாயங்காலம். அதுக்கு பிறகு தான் நம்ம கல்யாண தேதியை குறிக்கணும். குஷியோட படிப்பு முடிஞ்சதுக்கு பிறகு தான் கல்யாணத்தை வைக்கிற மாதிரி இருக்கும்"

"ஆமாம். அது தான் அவளுக்கும் நல்லது. எந்த டென்ஷனும் இல்லாமல் அவர் கிராஜுவேஷனை முடிப்பா"

அவர்களது அந்த முடிவில் அவனுக்கு சுத்தமாய் உடன்பாடு இல்லை. குஷி அவனிடம் பேசிய விதம், அவனுக்கு ஒரு நல்ல அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கவில்லை. அவனை வெறுப்பேற்றும் படி அவள் ஏதாவது செய்தால் என்ன செய்வது? அவள் தான் இப்போதெல்லாம் அதை வெகு சாதாரணமாய் செய்கிறாளே...! அவளைப் பற்றி தீவிரமாய் ஆலோசித்தான்.

மறுநாள் மாலை

ஜோசியரின் வருகைக்காக அனைவரும் வரவேற்பறையில் காத்திருந்தார்கள். கடைசியாக வந்தவள் குஷி தான். அர்னவ் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை கண்ட அவள், தன் முகத்தை திருப்பிக் கொண்டாள். அது அவன் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.

அங்கு வந்த ஜோசியரை பெரியவர்கள் மரியாதையுடன் வரவேற்றார்கள். அவர்கள் இருவரது ஜாதகத்தையும் அவரிடம் வழங்கினார் ரத்னா. அதை பெற்றுக்கொண்ட ஜோசியரின் கண்கள் குஷியின் மீது விழுந்தது.

தூக்கம் விற்று காதல் வாங்கினேன்!Where stories live. Discover now